Sunday, March 8, 2015

மறக்க முடியாத கேரம் போர்ட் (Part-3)

மறக்க முடியாத கேரம் போர்ட் (Part-3)
===================================
HOD-ன் வீட்டு கேட்டின் முன் நாங்கள் நின்ற போது மணி 5:00. கேட்ட்டைத் தட்டினோம். யோரோ வருவது தெரிந்தது. HOD வருவார் என நினைக்க, ஒரு பெண் வந்தார். வயது 18 இருக்கலாம். HOD-ன் மகளாய் இருக்கலாம்.
"யாருங்க, என்ன வேணும்"
எங்களிடையே மவுனம். யார் பேசுவது என்று குழப்பம். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
சித்தப்பு, பேசுடா என்று கிசுகிசுத்தனர். "டேய், நீங்க பேசுங்கடா"
"நீ ட்ரெஷரர் டா. அதனால நீ பேசினா கரெக்டா இருக்கும்டா"
"உங்களுக்கே ஓவரா இல்லையா. நான் ட்ரெஷரர்னு HOD பொண்ணுக்கு எப்டிடா தெரியும்"
"மாமா,அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்"
"அப்புறமா பாத்து, பாத்துதான்டா  இப்டி கேட் வாசல்ல நிக்கிறோம்"
கேட் திறக்கப் பட்டது. "யாருங்க"
"பீட்டர் சார் இல்லையாங்க"
"அப்பா ஒரு ஃபங்ஷன்க்கு போயிருக்கார், வர்றதுக்கு நைட் ஆகும்".
'சரிங்க, வந்தா நாங்க வந்தோம்னு சொல்லுங்க"
"நீங்க?"
"தேர்ட் இயர் ECE ஸ்டுடென்ட்ஸ்னு சொல்லுங்க"
"ஓகே".
"தேங்க்ஸ்"னு சொல்லிவிட்டு கிளம்பினோம். இந்த பிளானும் புஸ்ஸாகி விட்டதே. அடுத்து என்ன செய்யலாம் என்று பஸ்ஸில் போகும்போது யோசித்தோம். ஒன்றும் சரிப்படவில்லை.
மறுநாள் காலேஜ் போனோம். சுமார் 11 மணிக்கு எங்களை HOD கூப்பிட்டார். அப்பாடா, ப்ளான் வேலை செய்கிறது. பாலசுப்ரமணியம் பெருமை மிகுந்த முகத்துடன் முன்னே செல்ல, நாங்கள் பின் தொடர்ந்தோம். அதிர்ஷ்ட தேவதையை நினைத்துக் கொண்டேன்.
உள்ளே சென்றோம். "வாங்கய்யா"
மெதுவாய் சிரித்தோம்.
"யாருய்யா என் டாட்டர் கிட்ட மிரட்டுற மாதிரி பேசுனது?"
எங்கள் தலையில் சம்மட்டி விழுந்தது. "சார், நாங்க" என இழுத்தோம்.
"தப்பு மேல தப்பு பண்றீங்க. இது காலேஜ் மேட்டர். இத ஏன் நீங்க வீட்ல வந்து பேசணும்? ஐ டோன்ட் லைக் இட்"
நாங்கள் பேயறைந்து நிற்க,
"நீங்க வீட்டுக்கு வர தேவையில்ல. அதுவும் இல்லாம டாட்டர் கிட்ட தேவையில்லாம பேசி, வாட் நான்சென்ஸ்? அதான், தெளிவா சொல்லிட்டேனே, உங்க பேரன்ட்ஸ் இல்லாம வராம ஐ கான்ட் டு எனிதிங். யு கேன் லீவ் நவ்"
அதிர்ஷ்ட தேவதை "போடா, நீயுமாச்சு உன் கேரம் போர்டும் ஆச்சு" என மொத்தமாக பறந்தாள். அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டு, சாவை எதிர்நோக்கிய தூக்கு தண்டனைக் கைதி போல் இருந்தது எங்கள் நிலை. அப்பாவைக் கூப்பிட்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. அப்பாவிடம் எப்படி கதையை ஆரம்பிக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தபோது,
"இந்த ஐடியா குடுத்த பாலசுப்ரமணியம் எங்கடா. அவனை" என வெங்கி கத்தினான்.
ஆளைக் காணோம். வழக்கமாக 7-B பஸ்ஸில் போகிறவன், அப்போதே எஸ்ஸாகி விட்டது தெரிந்தது. எல்லாம் எங்கள் நேரம் என்று நொந்து கொண்டொம்.
மறுபடியும் ஹாஸ்டல். இரவு மணி 8. இன்னும் ஒரு நாளில் ஹாஸ்டல் & காலேஜ் டே வருகிறது. வருடத்தில் இந்த மூன்று நாட்கள் தான் காலேஜ் ஜேஜேவென இருக்கும். நாளை மதியம் சுகி சிவம் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சி என்று யாரோ மைக்கில் பேசியது கேட்டது. எதிலும் மனம் லயிக்கவில்லை. 
வெங்கியின் செல்ஃபோன் அடித்தது. எடுத்துக்கொண்டு வெளியே போனான். சற்று நேரம் கழித்து தொங்கிய முகத்துடன் வர,
"என்னாச்சுடா" என்று கேட்டேன்.
"எங்க அப்பா பேசினார்டா, நாளைக்கு காலேஜ் வர்றாராம்."
(தொடரும்)



No comments:

Post a Comment