Thursday, March 29, 2012

அரவான்

         கிளாடியேட்டர் படத்தின் இறுதி காட்சி. ரோமின் மாவீரன் மேக்சிமஸ், சீசருடன் போரிட்டு இறந்து விடுவார். அங்கிருக்கும் போர் வீரர்கள் அவரை தங்கள் தோளில் சுமந்து செல்வது போல் காட்சி வரும். பதவி ஆசை பிடித்த ஒரு அரசனின் சூழ்ச்சியால் மாவீரன் மேக்சிமஸ் உயிரை விடும் அந்த காட்சி பார்பவர்கள் மனதை நெகிழ செய்யும். கண்களை குளமாக்கும். ஆனால் அரவான் படத்தில், கிளாடியேட்டர் மாதிரியே ஒரு குறு அரசனின் சொந்த பகைக்காக பலிகடா ஆக்கப்பட்டு உயிரை விடும் நாயகன் 'சின்னா'வை நினைத்து நமக்கு எந்த வித சோகமோ, வருத்தம்மோ ஏற்படுவதில்லை. இந்த இடத்திலேயே அரவான் படத்தின் தோல்வி ஆரம்பிக்கிறது.
          சமீப காலமாக எந்த தமிழ் படத்தையும் ஆங்கில அல்லது உலக திரைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது நடக்கிறது. இது முற்றிலும் சரி இல்லையென்றாலும், நம் தமிழ் இயக்குநர்கள், ஆங்கில மற்றும் உலக திரைப்படங்களில் இருந்து காட்சிகளை சுடும் போது இந்த ஒப்பீடு சரி என்றே தோன்றுகிறது. அரவான் படம் பார்க்கும்போதும் 'அபாகலிப்டோ' மற்றும் 'கிளாடியேட்டர்' படங்களின் ஞாபகங்கள் வருவதை தவிர்க்க முடியாது. ஆனால் அவ்விரு படங்களின் திரைக்கதை, மேகிங் மற்றும் காஸ்டிங் இவைகளுக்கு முன்னால் அரவான் படம் ஒரு Free கக் குழந்தை தான்.
சாகித்ய அகடமி விருது வென்ற 'காவல் கோட்டம்' நாவலின் ஒரு பகுதிதான் அரவான். வணிக வியாபாரத்திற்காக கதையில் சில திருத்தங்களுடன் திரைக்கதை அமைத்திருக்கிறார் வசந்த பாலன் (இங்கேயே ஒரு பெரிய சறுக்கல்). காவல் கோட்டம், 18 -ஆம் நூற்றாண்டில் வாழும் கள்வர் & காவலர் பிரிவு தமிழர்களை பற்றிய கதை. கேட்கும்போதே ஆவலும், எதிர்பார்ப்பும் உண்டாக்கும் கதைக்களனை வைத்துக்கொண்டு, படு மொக்கையான திரைக்கதை, அமெச்சூர் தனமான கிராபிக்ஸ், வெறும் இரைச்சலை பொழியும் இசை & தமிழ் சினிமாவின் கிளிஷே காட்சிகளால் அந்த நல்ல கதை களனை வீணடித்து விட்டார்கள்.
          ஒரு கள்ளர் குழுவின் தலைவர் பசுபதி. ஒரு சந்தர்பத்தில் நல்ல திறமையான திருடர் ஆதியை பார்த்து, அவர் திறமையின் பொருட்டு அவரை தன் குழுவில் சேர்த்து கொள்கிறார். பின்னொரு நாள் திருட போகும்போது மாட்டிக்கொள்ளும் பசுபதியை ஆதி காபற்றிகிறார். பின் ஆதி யாரென ப்ளாஷ்பேக்  ஆரம்பிக்கிறது. காவல் காப்பதை தொழிலாக கொண்ட ஒரு ஊரை சேர்ந்தவர் ஆதி. தன் ஊரில் கொலையுறும் விரோதி ஊரை சேர்ந்த பரத்தின் சாவிற்கு பதிலாக ஆதியை பலிகடா ஆக்குவதென அந்த ஏரியா ராஜாவால் முடிவு செய்ய படுகிறது. இதற்கிடையில் தன்சிகாவுடன் காதல் + ரொமா ஸ் + திருமணம் ஆகிறது. பலிக்கு முன்னர் நாள் ஆதி தப்பிக்கிறார். ஆதிக்கு பதிலாக அவர் நண்பரை பலியிடுகின்றனர். ஆனாலும் ஏமாற்றிய ஆதியை கண்டு பிடித்து பலியிட ஊர் காரர்கள் துடிக்கிறார்கள். ஆனால் ஆதி இருபது பசுபதி ஊரில். ஆதி தப்பித்தார, உண்மையான கொலைகாரன் யார், தன்சிகா என்ன ஆனார் என்பது மிச்ச, சொச்ச கதை.
              இவ்வளவு நல்ல கதை இருப்பினும் படம் சொதப்பியதற்கு முக்கிய காரணங்கள்- ஒன்று- மொக்கையான + இழுவையான திரைக்கதை. இரண்டு- படம் கள்வர்களை பற்றியதா, காவலர்களை பற்றியதா என்ற பெரும் குழப்பம். இதில் தூக்கு தண்டனையை ஒழிப்போம் என்ற மெசேஜ் வேறு. பட இறுதியில் எதாவது மெசேஜ் போட்டால் நல்ல பெயர் கிடைக்கும் என்ற தமிழ் சினிமாவின் கேவலமான மனோபாவத்தின் வெளிப்பாடு இது.
               படத்தின் பிளஸ் என்றல் ஆதி, பசுபதி மற்றும் கரிகாலனின் நடிப்பு. பசுபதியின் கருப்பு நிற மேனி அவர் பாத்திரத்திற்கு நன்றாக செட் ஆகிறது. முதல் பாதியில் சற்று ஓவர் ஆக்டிங் போல தோன்றினாலும், சிக்ஸ் பேக் உடம்புடன் உழைத்திருக்கிறார் ஆதி. தன்சிகா- ஓகே. நாயகனை ஒரு பெண்ணாவது காதலிக்க வேண்டும் என்ற நம் தமிழ் சினிமா விதிகளுக்குட்பட்ட பெண்ணாக வருகிறார் அர்ச்சனா கவி. பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்!!!!
                படத்தின் மற்றொரு  மகா சொதப்பல் இசை. 3 பாடல்கள் மட்டும் ஓகே ராகம். பின்னணி இசை? சப்பாஆஆஆ!! ஒரே இரைச்சல். இந்த மாதிரி படங்களில் இசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இயக்குநர் எப்படி மிஸ் பண்ணினார்? சமீபத்தில் பீரியட் படங்களில் சிறந்த பின்னணி இசை இருந்து நான் பார்த்த படம்- பழசி ராஜா. இசை? வேறு யார்? நம் மாஸ்ட்ரோ இளையராஜா.
                வழக்கமான மசாலா திரைக்கதை, குத்து பாட்டு, பஞ்ச் வசனங்கள் போன்ற குப்பைகள் இல்லாமல் படம் எடுத்தற்காக மட்டும் பாராட்டலாம். மற்றபடி அரவான் ஒரு நார்மல் படமே. வித்தியாசமான கதைக்களனை எடுத்த உடனே, அப்படா, சூப்பர் ஸ்கிரிப்ட் எடுத்தாச்சு, கண்டிப்பா படம் ஓடிடும், நம்ம எப்டி வேணும்னாலும் படம் எடுக்கலாம் என்று நினைக்கும் தமிழ் இயக்குநர்களே, என்னதான் சூப்பர் ஸ்கிரிப்ட் இருந்தாலும் திரைகதையில் சொதப்பினால் உங்கள் படம் பப்படம் தான்.
மதிப்பெண்: 3/10