tag:blogger.com,1999:blog-4043414035623460372024-02-19T02:19:33.500-08:00அருண் சினிமா டாக்கீஸ்ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-404341403562346037.post-77087514580351970252016-04-17T01:12:00.000-07:002016-04-17T01:12:43.485-07:00வந்தேறிகள் - சூழ்ச்சி அரசியலின் கொடூர முகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
வந்தேறிகள் - சூழ்ச்சி அரசியலின் கொடூர முகம்</div>
<div>
<br /></div>
தமிழகமும் இந்தியாவைப் போல் பன்முகத் தன்மை கொண்டது. ஆதித்(?) தமிழர் அல்லாது தெலுங்கர், கன்னடர், ஜெயின் மற்றும் இன்னும் பிற குறு சமூகங்கள் அடங்கியதுதான் தமிழகம். பூர்வீகம் தமிழகம் இல்லையென்றாலும், பல தலைமுறைகளாக இங்கேயே வாழ்வதால், ஒரு சில பாரம்பரிய முறைகளைத் தவிர்த்து, தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றெனக் கலந்தவர்கள். சித்திரை-1 தான் இவர்களுக்கு புத்தாண்டு. பொங்கல் தான் உண்மையான பண்டிகை. சித்திரையில் அம்மன் திருவிழா. என்றுமே நாம் தமிழர்கள் இல்லை என்ற எண்ணம் தலை தூக்கியதே இல்லை.<div>
<br /></div>
<div>
ஆனால், சமீப காலமாக தமிழனை தமிழன்தான் ஆள வேண்டும்; இவன் தெலுங்கன், இவன் கன்னடன், இவன் மலையாளி என பிரித்தாளும் சூழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி பெரும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. தமிழனை தமிழன்தான் ஆள வேண்டும் என்பது வரவேற்கத் தக்க விஷயம்தான். ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால், அந்த சிறுபான்மையினர் என்ன கதிக்கு ஆளாவார்கள் என்று நினைத்துப் பாருங்கள்? இப்போதே வந்தேறிகள் என்று சீண்டுகிறார்கள். நாளை தமிழருக்கு மட்டும்தான் அரசு வேலை, தமிழர் மட்டும் தான் இங்கே கடை வைக்க வேண்டும், தமிழர் மட்டும் தான் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று கிளம்பினால்? தமிழன் தான் உயர்ந்த ஜாதி, வந்தேறிகள் எல்லாம் கீழ் ஜாதி என ஆரம்பித்தால்?ஒட்டு மொத்த சிறுபான்மையினர் இனமே தமிழகத்தில் வாழ முடியாத சூழல் ஏற்படலாம். ஜெர்மானியர்கள் தான் உயர்ந்த ரத்தம், யூதர்கள் அசுத்த ரத்தம் என்று ஆரம்பித்த ஹிட்லர், இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஜெர்மனியை எந்த நிலைக்கு ஆளாக்கினார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஜெர்மனிக்கு ஒரு ஹிட்லர் என்றால், ஏறக்குறைய தமிழகத்திற்கு சீமான். இவரிடம் சில கேள்விகள்.</div>
<div>
<br /></div>
<div>
1. வந்தேறிகள் என்று சொல்லப்படும் பிற சமூகத்தின் ஓட்டு எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லும் துணிவு உண்டா?</div>
<div>
2. உங்களின் கொள்கைப்படி, ஆதித் தமிழர் அல்லாதவர்கள் வந்தேறிகள். அப்படிப் பார்த்தால், இந்து மதம் தவிர்த்த, கிருத்துவர்கள், முஸ்லிம்கள், சமணர்கள் இவர்கள் எல்லேருமே வந்தேறிகள்தான். இவர்கள் யாரும் எங்களுக்கு ஓட்டு போடத் தேவையில்லை என்று சொல்ல முடியுமா?</div>
<div>
3. தெளுங்கனான திருமலை நாயக்கர் கட்டிய திருமலை நாயக்கர் மஹாலை இடிக்க வேண்டும் என சொன்னீர்கள். வெள்ளையர்களிடமும்தான் நாம் அடிமைப் பட்டோம். அதற்காக அவர்கள் தொடங்கிய இந்தியன் ரயில்வேயை ரத்து செய்ய முடியுமா??</div>
<div>
<br /></div>
<div>
பின் குறிப்பு: சீமானின் கூற்றுப்படி நானும் வந்தேறிதான். சுமாரு 12-13 தலைமுறைக்கு முன்னால், எங்கள் முன்னோர்கள் ஆந்திராவின் ஏலூர் என்ற ஊரிலிருந்து இங்கே பஞ்சம் பிழைக்க வந்ததாக என் தாத்தா சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் என்றுமே நாங்கள் தெலுங்கர் என்று நினைத்ததில்லை. நாங்கள் மட்டுமல்ல. வந்தேறிகள் எல்லோருமே!!! </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-59938732480028474602016-02-09T10:23:00.001-08:002016-02-09T10:23:39.500-08:00ப்ராஜெக்ட்டும், சோழா மெஸ்ஸும் (1)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ப்ராஜெக்ட்டும், சோழா மெஸ்ஸும் (1)<br />
<br />
எட்டாவது செமஸ்டர். ப்ராஜெக்ட் எனப்படும் முக்கியமான வஸ்து வரும் செமஸ்டர். ஆரம்பத்தில் நாமாக எதாவது ப்ராஜெக்ட் செய்து சாதிக்க வேண்டும் என்ற பெரிதாக கனவு இருந்தது. பின்னாளில் ஆசைகள் சுருக்கப்பட்டு, போகப் போக நாமாக செய்வது கடினம் என்பது விளங்கி, நான்காம் ஆண்டில் நாமாக செய்யவே முடியாது என்பது புரிந்தது. கோயம்புத்தூரில் சல்லிசான விலைக்கு ப்ராஜெக்ட் விற்கிறார்கள் என்று தெரிந்து, அவனவன் கோயம்புத்தூருக்கும், ஈரோடுக்கும் அடிக்கடி போய் வர நேர்ந்தது.<br />
<br />
எட்டாவது செமஸ்டரின் ஆரம்பத்திலேயே ப்ராஜெக்ட்க்கு ஆள் சேர்க்கும் படலம் ஆரம்பித்திருந்தது. சில பேர் தேவர் மெஸ்ஸில் பரோட்டா, ஆம்லெட் வாங்கிக் கொடுத்து குரூப் சேர்க்கிறார்கள் என்ற வதந்தி வேறு பரவியது. சரி, நமக்குன்னு ஒருத்தன் இனிமேல பொறக்கப் போகிறான்(?) என்று நினைத்துக் கொண்டு பெரிதாக மெனக்கெடவில்லை. இறுதியாக நான், பரணி, விஜயவேல், மணிவண்ணன் என நான்கு பேராக ப்ராஜெக்ட் குரூப் ஆரம்பிக்கப் பட்டது. க்ரூப்பின் முதல் தீர்மானமாக, நான் ஏற்கனவே கேம்பஸ் இன்டெர்வியுவில் செலக்ட் ஆனதால், ப்ராஜெக்ட்டின் முழு வேலையும் நான் மட்டும் பார்ப்பதாக முடிவு செய்யப்பட்டது. ப்ராஜெக்ட் குரூப் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று நினைத்துக் கொண்டேன்.<br />
<br />
ப்ராஜெக்ட் சென்ட்டர் பிடிப்பது அடுத்த வேலை. கோயம்புத்தூரில் ஹோப் காலேஜ் என்னுமிடத்தில் நிறைய ப்ராஜெக்ட் சென்ட்டர்கள் இருப்பது கேள்விப்பட்டு அங்கே போனோம். அங்கே நிறைய இல்லை, திரும்பிய பக்கமெல்லாம், புற்றீசல் போல சென்ட்டர்கள் இருந்தன. எங்கே செல்வது என்று குழம்பி, ஒரு வழியாக ACET என்னும் சென்ட்டரை அணுகி, 10,000 ரூபாய்க்கு பேரம் முடிக்கப்பட்டது. அங்கே சேர்ந்ததற்கு இரண்டு காரணங்கள். 1. அந்த சென்ட்டரில் அமெரிக்க கம்பனியுடன் கொலாப்ரேஷன் இருப்பதாக ஒரு போட்டோவை காட்டினான். அதில் சென்ட்டர் ஓனருடன் ஒரு வெள்ளையன் இருந்தான். 2. அந்த சென்ட்டர் பால்கனியில் இருந்து பார்த்தால் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் கல்லூரி பெண்கள் தெளிவாகத் தெரிந்தனர்!!!<br />
<br />
எங்களுடன் பாலமுருகன் மற்றும் கிருபாகரன் க்ரூப்பும் அங்கே ப்ரோஜெக்ட்டை வாங்கினார்கள். நாங்கள் எல்லோரும், சென்ட்டர்க்கு பக்கத்திலேயே ஒரு PG ஹாஸ்டலில் ரூம் எடுத்துத் தங்கினோம். இரண்டு நாட்கள் கழித்து ப்ராஜெக்ட் கிளாஸ் தொடங்கும் என்றும், இரண்டு வாரங்கள் நடக்கும் என்றும் ஓனர் சொன்னான். இரு நாட்கள் கழித்து சரித்திர புகழ் பெற்ற வகுப்புகள் தொடங்கின. அப்போது தெரியாது நாங்கள் மொத்தமாக ஏமாற்ற்றப் படப்போகிறோம் என்று..<br />
<br />
(தொடரும்)<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-80273805419118630412016-02-06T10:22:00.000-08:002016-02-06T10:22:54.526-08:00எரியும் பனிக்காடு - அதிகாரச் சுரண்டலின் கொடூர முகம் (Part-2)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px;">
எரியும் பனிக்காடு - அதிகாரச் சுரண்டலின் கொடூர முகம் (Part-2)</div>
<div>
<br /></div>
<div>
கருப்பன்-வள்ளி மாதிரியான ஆயிரக்கணக்கான தலித் தொழிலாளர்கள், வெள்ளையர்கள் & சில இந்திய ஈனப் பிறவிகளால் வதைக்கப்பட்டதே எரியும் பனிக்காடு புத்தகம். ஆனால் இன்றுவரை தலித் மட்டுமன்றி, அனைத்து ஏழைத் தொழிலாளர்களும் காலம் காலமாக கொடுமையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு வித்தியாசம், அப்போது வெள்ளையன் + சில துரோகிகள். இப்போது முழுக்க முழுக்க பேராசை பிடித்த (இந்திய) பண முதலைகள்.</div>
<div>
<br /></div>
<div>
ஷாப்பிங் மால்களில் ஒரு கப் காபி நூறு ரூபாய்க்கு விற்கும் இதே நாட்டில்தான், நூறுக்கும் குறைவாக ஒரு நாள் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். வட மாநிலங்களில் இருந்து இங்கே கட்டுமான வேலைக்கு வரும் அப்பாவி தொழிலாளர்களுக்கும், கருப்பன்-வள்ளிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அங்கே, ஆனைமலை எஸ்டேட் என்றால், இங்கே சிங்கார சென்னை. இங்கே அவர்கள் செத்தாலும் கேட்பதற்கு ஒரு நாதியும் கிடையாது.</div>
<div>
<br /></div>
<div>
எல்லாத் தொழிலாளர்களும் சுரண்டப்படுகிறார்கள் என்றாலும், அதிக பாதிப்புக்கு உள்ளாவது- உள்ளாகியிருப்பது தலித் மக்களே. அரசு அதிகாரமும், உயர் ஜாதி வர்க்கமும், அவர்களை ஒரு எல்லைக்கு மேல் வளரவோ, சிந்திக்கவோ விடாமல், தன்னை சார்ந்து இருக்கும் படியாகவே வைத்துக் கொள்ள விரும்புகிறது. இதற்க்கு ஒரு நல்ல உதராணம்- என்னுடன் 10-வது வரை ஒன்றாகப் படித்த தலித் நண்பன், எங்கள் ஊரில் சாணி தட்டிக் கொண்டு இருக்கிறான். அதுவொன்றும் இழி தொழில் இல்லை என்றாலும், மூன்று தலை முறையாக அவன் குடும்பத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதுதான் பிரச்சினை. எங்கே தவறு? யாரைப் பழி சொல்வது? என்ன தீர்வு?</div>
<div>
<br /></div>
<div>
இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது, சில அறிவுஜீவிகள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தால்தான் இந்தியா உருப்படும் என்று ஜல்லியடிப்பது என்ன மாதிரியான நியாயம் என்று புரியவில்லை. இட ஒதுக்கீட்டை தவறாக உபயோகிப்பதும், அது சரியான நபர்களுக்கு போய் சேரவில்லை என்பதுமே அதில் இருக்கும் தலையாய பிரச்சினைகள். அதை சரி செய்ய வக்கில்லாமல், மனித மலத்தை சுமந்து கொண்டும், கழிவு அடைப்பை சரி செய்ய குழியில் இறங்கி உயிரை மாய்க்கும் பல தலித் மக்களின் ஒரே ஆயுதமான இட ஒதுக்கீட்டையும் அவர்களிடம் இருந்து பிடுங்குவது என்ன நீதி?</div>
<div>
<br /></div>
<div>
என்றைக்கு கழிவு அடைப்பை சரி செய்ய பள்ளத்தில் இறங்குபவன் ஒரு தலித் இல்லையோ, அன்றைக்கு ரத்து செய்து கொள்ளுங்கள் இட ஒதுக்கீட்டை. </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-57265328117037234782016-02-06T09:35:00.002-08:002016-02-06T09:35:35.542-08:00எரியும் பனிக்காடு - அதிகாரச் சுரண்டலின் கொடூர முகம் (Part-1)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எரியும் பனிக்காடு - அதிகாரச் சுரண்டலின் கொடூர முகம் (Part-1)<br />
<br />
P.H.டேனியல் எழுதி, இரா.முருகவேள் மொழி பெயர்த்த 'எரியும் பனிக்காடு' (Red Tea) புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். அதன் மீதான பார்வை இங்கே. பாலா இயக்கிய 'பரதேசி' படத்தின் மூலக்கதை இப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
சுதந்திரத்திற்கு முன்னால், இந்தியாவில் புரையோடிப் போயிருந்த சாதிய பாகுபாடுகள், ஆங்கிலேயர்களால் கொஞ்சம் மாற்றப்பட்டது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், இந்த புத்தகம் உங்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுக்கும். இந்து மதத்தின் சாதிய அமைப்பால், விவசாய மற்றும் பண்ணைக் கூலிகளாக இருந்த ஏழை தலித் மக்கள், வெள்ளையர்களின் சுய லாபத்திற்காகவும், பண வெறிக்காகவும் எப்படி பலிகாடா ஆனார்கள் என்பதை முகத்தில் அறைந்தால் போல் சொல்கிறது இந்த புத்தகம். நம் நாட்டைச் சேர்ந்த சில ஈனப் பிறவிகளும், தங்கள் நலனுக்காக, வெள்ளையர்களின் கால்களைக் கழுவிப் பிழைத்துக் கொண்டு, தன சொந்த இன மக்களியே பலி கொடுத்த கொடூரத்தையும் பதிவு செய்துள்ளது.<br />
<br />
விவசாயம் பொய்த்ததால், சொந்த ஊரில் பிழைக்க வழியற்று, கங்காணியின் ஆசை வார்த்தையில் மயங்கி, தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குப் போகும் கருப்பன்-வள்ளி தம்பதிகளின் பயணத்தில் ஆரம்பிக்கிறது கதை. அங்கே நடக்கும் சுரண்டல்கள், கொடுமைகள், பாலியல் வன்முறைகள், கற்பனைக்கும் எட்டாத கொடூரங்கள் அவர்களின் மூலமாக சொல்லப் படுகிறது. ஒரு வருட ஒப்பந்தத்தில் வரும் கருப்பன்-வள்ளி தம்பதி, கங்கானியால் ஏமாற்ற்றப்பட்டு, மூன்று வருடம் தங்க நேர்ந்து, வள்ளியின் மரணத்தில் முடிகிறது புத்தகம். வள்ளியின் மரணத்தில், அழுவது கருப்பன் மட்டுமல்ல, நாமும்தான்.<br />
<br />
புத்தகம் படித்த மறுநாள், அலுவலகத்தில் தேநீர் அருந்தும்போது, ஒரு கணம் உற்றுப் பார்த்தேன். அது கருப்பன்-வள்ளியின் கண்ணீரும், ரத்தமுமாக தெரிந்தது. முதலாளித்துவத்தின் பணவெறிக்கு பலியான அத்தனை தேயிலைத் தொழிலாளர்களின் கண்ணீரும், ரத்தமும் நாம் அருந்தும் ஒவ்வொரு தேநீர் துளியிலும் இருக்கிறது என்பதே மறுக்க முடியாத, கசப்பான உண்மை...<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-404341403562346037.post-51761174335894598382016-01-13T07:02:00.001-08:002016-01-13T07:02:55.068-08:00ஸ்டிக்கர்களின் காலம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இத்தனை TMC நீரைத் திறந்து விடவேண்டும் என்று பத்து முறைக்கும் மேலாக உச்ச நீதி மன்றம் கூவினாலும், அதை கர்நாடகம் காதில் வாங்காது.<br />
<br />
முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீரைத் தேக்கலாம் என்று உச்ச நீதி மன்றம் 1001வது முறையாக சொன்னாலும், அங்கே செல்லும் தமிழக அதிகாரிகளை கேரளம் தடுத்து நிறுத்தும்.<br />
<br />
உண்மையான சாட்சி நொந்து, வெந்து இறந்து போக, பிறழ் சாட்சியின் அடிப்படையில், சல்மான்கான் தான் காரை ஓட்டினார் என்பதற்கு ஆதாரம் போதவில்லை என்று அவர் விடுதலை ஆகலாம்.<br />
<br />
ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியை செலுத்தி, அவளை சிதைத்த மிருகம், 18- வயது ஆகவில்லை என்பதனால் விடுதலை ஆகி, கைசெலவுக்கு அரசாங்கத்திடம் இருந்து பணம் பெறலாம்.<br />
<br />
நூற்றுக்கணக்கான அப்பாவி தொழிலாளர்களை பலிவாங்கிய முகலிவாக்கம் 11-மாடி கட்டிடத்தின் முதலாளி, மறுநாளே ஜாமீனில் வெளிவந்து, இன்று வரை, சொகுசு வாழ்க்கை வாழலாம்.<br />
<br />
மேற்கண்ட அற்புதங்கள் எல்லாம் நிகழும் நம் இந்திய தேசத்தில், தன் சொந்த நாட்டைச் சேர்ந்த ஓர் இனத்தின் மக்களின் மரபை, அடையாளத்தை, எங்கிருந்தோ வந்த அந்நிய அமைப்பால் தடை செய்ய முடிகிறது என்றால், ஆச்சர்யம் இல்லை தானே? ஏனென்றால் இது ஸ்டிக்கர்களின் காலம்.<br />
<br /></div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-84822020937721874002016-01-12T10:41:00.000-08:002016-01-12T10:41:27.929-08:00ஜல்லிக்கட்டு மீதான தடை - ஒரு தொடக்கம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஜல்லிக்கட்டு மீதான தடை - ஒரு தொடக்கம்<br />
<br />
ஜல்லிக்கட்டு பிரச்சினையில், இப்போதே முடிவு எடுக்காவிடில், கீழ்க்கண்ட தடைகளும் பின்னாளில் வரலாம்.<br />
<br />
1. அரிசி நிறைய சேர்ப்பதே சர்க்கரை நோய்க்குக் காரணம் என்று கூறி, இட்லி, தோசை, சாதம் இவற்றிற்குத் தடை- சப்பாத்தி சாப்பிட மட்டுமே அனுமதி<br />
<br />
2. வடை, போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களில் கொழுப்பு அதிகம் இருப்பதால் தடை- சமோசா, பானி பூரி, பேல் பூரி, பிட்சா, பர்கர்க்கு மட்டுமே அனுமதி<br />
<br />
3. வேஷ்டியில் பக்கெட் இல்லை- அதனால் வேஷ்டிக்குத் தடை- பேன்ட் போட மட்டுமே அனுமதி. வேண்டுமென்றால் ஷெர்வானி அணிந்து கொள்ளலாம்.<br />
<br />
4. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற கிராமிய கலைகளில் ஆபாசம் நிறைய இருப்பதால் அவைகளுக்குத் தடை- இனிமேல் தாண்டியா மட்டும் ஆட அனுமதி<br />
<br />
5. கோயில் திருவிழாக்களில் மஞ்சள் நீரூற்றும் நிகழ்ச்சிக்குத் தடை - ஹோலி கொண்டாட மட்டுமே அனுமதி<br />
<br />
6. நாட்டுக்கோழி, காடை, வெள்ளாடு- இவைகளின் இறைச்சி உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதால் தடை. அரசு அங்கீகாரம் பெற்ற KFC, McDonald சிக்கனுக்கு மட்டும் அனுமதி<br />
<br />
7. ரஸ்தாளி, இலக்கி, கற்பூரவல்லி போன்ற நாட்டு வாழைப் பழங்களுக்குத் தடை- மோரிஸ் போன்ற மரபணு மாற்றப்பட்ட பழங்களுக்கு மட்டுமே அனுமதி.<br />
<br />
2000 - 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியையே தடை செய்ய முடிந்த நம் நாட்டில், மேற்சொன்ன சின்ன விஷயங்களா கடினம்? என்றாவது ஒருநாள், சொந்த மரபு நெறிமுறைகளைத் தொலைத்துவிட்டு, குடிநீர் முதல், மலம் கழுவும் நீர் வரைக்கும் பன்னாட்டு நிருவனங்களிடம் கைகட்டி நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.<br />
<br />
<br />
<br /></div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-60796365525768186122016-01-12T09:57:00.000-08:002016-01-12T09:57:29.341-08:00ஜல்லிக்கட்டு - இனத்தின் அடையாளத்தை அழித்தல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஜல்லிக்கட்டு - இனத்தின் அடையாளத்தை அழித்தல்<br />
<br />
ஒரு இனத்தை முற்றிலும் வேரறுக்க இரு வழிகள் உண்டு. 1. இன மக்களை முற்றிலும் அழிப்பது, 2. அந்த இனத்தின் அடையாளத்தை அழிப்பது. ஹிட்லர், யூத இன மக்களை அழிக்க முயன்றது முதல் வழி. ஆஸ்திரேலியாவில் பழங்குடியினர்களின் பெண்களை வெள்ளையர்கள் திருமணம் செய்து, கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களின் இனத்தை அழிக்கச் செய்தது இரண்டாம் வழி. அதேபோல், காளைகளைத் துன்புறுத்துகிறார்கள் என்ற பொட்டைக் காரணத்தைக் காட்டி, ஜல்லிக்கட்டு என்ற தமிழனின் பூர்வ அடையாளத்தை அழிப்பதற்கு முயற்சிகள் ஏகபோகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதைத்தடுத்து நிறுத்த வேண்டிய மத்திய, மாநில அரசுகளோ, இந்த பிரச்சினையை தங்கள் ஓட்டு வங்கிக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில்தான் முனைப்புடன் இருக்கின்றன என்பது அதனினும் வெட்கக்கேடு.<br />
<br />
ஜல்லிக்கட்டை தடை செய்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் இந்த மிருக நல ஆர்வலர்களின் முக்கிய நோக்கம் நம் காளைகளின் மீதுள்ள அன்பா? பரிவா? ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இந்த வழக்கின் சில நாள் செலவே 2 கோடி ரூபாய் என்றால், இதில் பின்னால் யார் இருக்கிறார்கள், அவர்களின் நோக்கம் என்ன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. அப்படி உண்மையிலேயே விலங்குகள் மீது அக்கறை இருந்தால், இந்தியாவில் மட்டும் அழியும் நிலையில் எண்ணற்ற விலங்குகள் இருக்கின்றன. முதலில் அவைகளைக் காப்பாற்றுங்கள். அப்புறம் ஜல்லிக்கட்டுக்கு வரலாம்.<br />
<br />
எங்கள் ஊரில், ஒரு விவசாயியின் காளை இறந்து விட்டது. அவரும், அவர் மனைவியும்,தன் சொந்த மகன் இறந்தது போல, அழுது புரண்டு, இறுதி ஊர்வலம் நடத்தி அந்த காளையை அடக்கம் செய்தனர். இதுவே, எங்கள் மக்களுக்கும், காளைகளுக்கும் உள்ள பந்தம். AC அறையில் உட்கார்ந்து கணிணியைத் தட்டிக் கொண்டு, தின்ற பீட்சா, பர்கர் செரிக்காமல் கோலா-பெப்சி அருந்தும் நீங்கள், காளைகளை எப்படிக் கையாள வேண்டுமென்று எம் மக்களுக்கு சொல்லவேண்டியதில்லை.<br />
<br />
<br /></div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-44800397693466278412015-12-19T00:19:00.000-08:002015-12-19T00:19:46.578-08:00பீப் சாங் மட்டும் தான் ஆபாசத்தை வளர்க்கிறதா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பீப் சாங் மட்டும் தான் ஆபாசத்தை வளர்க்கிறதா?<br />
<br />
சற்று நாட்களாக மீடியாவில் காணமல் போயிருந்த மாதர் சங்கங்கள் பலவும், சிம்பு-அனிருத் பாடிய "பீப்" பாடல் மூலம் மீண்டும் முகம் காட்டி இருக்கிறார்கள். "பீப்" பாடல் தவிர தமிழ் கூறும் நம் சினிமா பாடல்கள் யாவும் தேவாரம்-திருவாசகம்-திருப்புகழ் மாதிரி இவர்களுக்கு தெரிந்திருக்கலாம். அதனால் தான் பீப் பாடலைத் தடை செய்வது மூலம், சமூகம் முழுவதும் திருந்தி விடும் என்று நினைக்கிறார்கள். பீப் பாடல் தவிர்த்து நம் தமிழ் சினிமா இதுவரை செய்தது என்ன? சற்று விரிவாகப் பார்ப்போம்.<br />
<br />
திருடா திருடி படம் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 'மன்மத ராசா' என்ற ஆழ்ந்த கருத்துக்கள் செறிந்த பாடலைக் கொடுத்து புகழ் பெற்ற படம். இந்த படத்தை ஒரு நாள் திருவிழா சமையம், பாட்டி ஊரில் குடும்பத்துடன் பார்க்கும் பாக்கியம் கிட்டியது. இடைவேளைக்குப் பிறகு, 5 நிமிடத்திற்கு ஒருமுறை சேனல் மாற்ற வேண்டிய சூழல். அவ்வளவு ஆபாசம். சரி வேறு படம் பார்க்கலாம் என்றால், வாண்டுகள் இந்த படம்தான் பார்க்க வேண்டுமென்று அடம்பிடித்தனர் (மன்மத ராசா பாட்டிற்காக). ஒரு வழியாக பார்த்து தொலைத்தோம்.<br />
<br />
என் கேள்வி இது தான். அந்த படம் பீப் பாடல் அளவில் பாதி கண்டனங்களையாவது பெற்றதா? மேற்சொன்ன படம் ஒரு பதம் தான். அதைவிட ஆபாசமான பாடல்களும், காட்சிகளும் தமிழ் சினிமாவில் அளவில்லாமல் குவிந்து கிடக்கின்றன. ஆனால், ஒரு சில பாடல்களோ, காட்சிகளோ சர்ச்சையில் சிக்குவது தான் நகைமுரண்.<br />
<br />
'உரலு ஒன்னு அங்கிருக்கு, உலக்கை ஒன்னு இங்கிருக்கு' பாடல் எதைக் குறிக்கிறது? 'நாட்டுச்சரக்கு நச்சுனுதான் இருக்கு' பாடலில் சரக்கு யார்? 'மைனர் கு** சுட்டுட்டேன்' வசனம் சொல்வது என்ன? 'This is my fu**ing game'-ல் fu**ing-க்கு இணையான தமிழ் வார்த்தை என்ன? அப்போதெல்லாம் எங்கே போயின மாதர் சங்கங்கள்? எழுத்தாளர் சுஜாதா சொல்வார், 'பிரபலங்களைத் திட்டுவது' பற்றி. சடாரென மீடியா வெளிச்சம் பெற, குறுக்கு வழிதான் இந்த பிரபலங்களைத் திட்டுவது. அதைத்தான் சங்கங்கள் செய்து கொண்டிருகின்றன.<br />
<br />
சினிமாவை விட்டு நிஜத்திற்கு வருவோம். தமிழ்நாட்டில் தினமும் எத்தனையோ பாலியல் அத்துமீறல்களும், மோசடிகளும் நடந்த வண்ணம் உள்ளன. அதற்கு இந்த மாதர் சங்கங்களின் எதிர்வினை என்ன? சமீபத்தில் ஒரு சிறுமியை அவளின் அண்ணன், தாத்தா உட்பட பலர் சீரழித்த பிரச்சினையில், சங்கங்கள் என்னென்ன போரட்டங்களில் ஈடுபட்டன?<br /><br />
நிஜத்தில் ஆற்ற வேண்டிய களப்பணி எவ்வளவோ இருக்க, தம்படிக்குத் தேறாத பீப் பாடலில் தம் நேரத்தை வீனடிப்பதைத்தான் மாதர் சங்கங்கள் விரும்புகின்றனவா?<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-84469979721300866182015-12-18T23:41:00.000-08:002015-12-18T23:41:40.107-08:00எனக்குத் தமிழ் தெரியாது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<u>எனக்குத் தமிழ் தெரியாது</u><br />
<br />
முந்தைய நாள் அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிடும்போது, சாதம் தீர்ந்து விட்டது. உணவு பரிமாற நின்றிருந்த பையனிடம் தம்பி, சாதம் எப்பப்பா வரும் என கேட்டேன். அவன் அமைதியாக நிற்க, சரி ஆங்கிலத்தில் கேட்கலாம் என்றெண்ணி, "do you know when the rice will come here?". அதற்க்கு சொன்னான் பாருங்க, "சார், தமிழ் நஹி மாலும்".<br />
<br />
எனக்கு மட்டும் ஏங்க இப்படியெல்லாம் நடக்குது??<br />
<br />
<br /></div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-58015670691150653972015-06-21T09:41:00.000-07:002015-06-21T09:41:51.872-07:00காக்கா முட்டை - விமர்சனம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
காக்கா முட்டை - விமர்சனம்<br />
<br />
காக்கா முட்டை படத்தில் ஒரு காட்சி: பெரிய காக்கா முட்டையை பிட்சா கடை மேலாளர் அடிக்கிறார். தியேட்டரில் பயங்கர நிசப்தம். மயான அமைதி. pin-drop-silence என்பார்களே, அது மாதிரி. கதாபாத்திரங்களின் உணர்ச்சி- அது இன்பமோ துன்பமோ, நம்மிடமும் அது பிரதிபலிக்க வேண்டும். அதுவே ஒரு உன்னதத் திரைப்படத்துக்கான அடையாளம். இதற்கு சமீபத்திய உதாரணம் 'காக்கா முட்டை'. அந்த இரண்டு பொடியன்கள் சிரித்தால் நாமும் சிரிக்கிறோம். அவர்கள் அழுதால் நமக்கும் தொண்டை அடைக்கிறது. இந்த உணர்வே காக்கா முட்டை படத்தின் பெரிய பலம்.<br />
<br />
எதாவது கருத்து சொல்ல ஆசைப்பட்டு, தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டு மொக்கை வாங்கும் தமிழ் இயக்குனர்களுக்கு மத்தியில், பெரிதாக மெனக்கெடாமல் போகிற போக்கில் மிக யதார்த்தமாக கருத்துக்களை வீசி விட்டுச் செல்கிறார் இயக்குனர். பொருளாதார ஏற்றத்தாழ்வு, உலகமயமாக்கல், அரசியல் சீர்கேடு, ஊடகங்களின் சுய நலம் என நாம் கவனிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.<br />
<br />
அந்த இரண்டு பொடியன்கள், அம்மாவாக ஐஸ்வர்யா, அந்த பாட்டி மற்ற பிற நடிகர்கள் யாரும் நடித்த மாதிரி இல்லை. ஏதோ சைதாபேட்டை குப்பத்து ஏரியாவிலேயே இருக்கும் மக்கள் மாதிரி, அப்படியொரு யதார்த்தம். இவையெல்லாம் தாண்டி, என்னை ஈர்த்த பாத்திரம் பிட்சா கடை முதலாளியாக வரும் பாபு ஆண்டனி. அத்தனை இக்கட்டான சூழ்நிலையிலும், பிரச்சினையை எளிதாகக் கையாண்டு, ஒரே நொடியில் ஒட்டு மொத்த ஊடகங்களிலும் தன்னைப் பற்றி நற்பெயரை ஏற்படுத்தும் ஒரு தேர்ந்த பணக்கார முதலாளியை கண்முன் நிறுத்துகிறார் பாபு ஆண்டனி. நம் தினசரி வாழ்விலும் இது மாதிரி ஏகப்பட்ட பாபு ஆண்டனிகள் இருக்கின்றனர். யோசித்துப் பார்த்தல் புரிய வரும். (சமீபத்திய நல்ல உதாரணம்: நரேந்திர மோடி)<br />
<br />
'காக்கா முட்டை' படத்தை திட்டி எழுதி சில அறிவுஜீவிகள் தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்கள் உரிமை. ஆனால், இதே மேதாவிகள், டோரன்ட்டில் "Children of Heaven" டவுன்லோட் பண்ணி படம் பார்த்து விட்டு, ஆகா ஓஹோ என புகழ்வதைத் தான் பொறுக்க முடியவில்லை. சுஜாதா சொன்ன மாதிரி, அவர்களை பசித்த புலி தின்னட்டும்.<br />
<br />
நீங்கள் ஆயிரம் ரூபாய் செலவு செய்து, அழுகிப் போன முட்டை மாதிரியான படங்களைப் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கலாம். ஆனால் எவ்வளவு பணம் செலவு ஆனாலும், இந்த பொன்முட்டயை தவற விட்டு விடாதீர்கள் நண்பர்களே.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-84824798558573667782015-06-02T05:09:00.001-07:002015-06-02T05:09:44.754-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எங்கே நடக்கிறது தவறு??<br />
<br />
இரண்டு வாரம் அலுவலக வேலை காரணமாக தைவான் நாட்டில், ஷின்ச்சு (Hsinchu) என்ற நகரில் தங்க வேண்டி வந்தது. வார இறுதியில் நண்பர்களுடன் ஊர் சுற்றிப் பார்க்கையில், ஒரு விஷயம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. நம்மூர் பெட்டிக்கடைகள் போல சிறு சிறு கடைகளில் கூட மது விற்பனை நடைபெறுகிறது. பலதரப்பட்ட வகைகளுடன். பெண்கள் கூட மது வாங்குவது சாதரணமாக .இருந்தது. ஆனால், நாங்கள் இருந்த பதினைந்து நாட்களில், பொது இடங்களில் ஒருவரைக் கூட மது போதையில் பார்க்கவில்லை. யாரும் சாலையில் சுய நினைவின்றி விழுந்து கிடைக்கவில்லை. ஆனால், மது அருந்துவதை ஒருவிதத் தவறாக நினைக்கும் நம் தமிழ்த் திருநாட்டில்தான் நிலைமை தலைகீழ். இரவு நேரங்களில், அதிமிகு போதையுடன் தள்ளாடும் 'குடிமகன்களை' எங்கிலும் மிக சாதாரணமாகக் காண முடியும். தைவானிலும் மதுதான் விற்கிறார்கள்; நம்மூரிலும் இதே மதுதானே விற்கிறார்கள்? எங்கே நடக்கிறது தவறு????</div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-48196954850865447902015-05-31T09:03:00.000-07:002015-05-31T09:03:54.737-07:00இளையராஜா - மங்காது ஒளிரும் நட்சத்திரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இளையராஜா - மங்காது ஒளிரும் நட்சத்திரம்<br />
<br />
பின்னணி இசையில் இந்தியத் திரை உலகில் நம் இளையராஜாவை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்பது என் தாழ்ந்த கருத்து. எத்தனையோ படங்களை இதற்க்கு உதாரணமாகக் காட்டலாம். என்னால் முடிந்த ஒரு உதாரணம் இது.<br />
பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடித்து, தங்கர் பச்சான் இயக்கிய அழகி படம் இளையராஜாவின் பின்னணி இசையின் மேதமைக்கு ஒரு நற்சான்று. அதிலும், பார்த்திபன்- நந்திதா உறவின் மீது தேவயானிக்கு சந்தேகம் வரும்போது, அந்த உணர்ச்சியை வயலின் இசையில் கொண்டு வந்திருப்பார் ராஜா. காட்சிகள் இன்றி அந்த இசையை மட்டும் கேட்டால் கூட, தேவயானியின் உள்ளுணர்வை நம்மாலும் உணர முடியும். அதுதான் ஒரு சிறந்த பின்னணி இசைக்கு இலக்கணம். என் அறிவுக்கு எட்டியவரை, அப்படிப்பட்ட இலக்கணத்தை இயற்றுவது நம் ராஜாவுக்கு மட்டுமே சாத்தியம்.</div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-84659711587131475542015-03-09T11:58:00.000-07:002015-03-10T01:28:05.169-07:00ராகிங் என்னும் சாத்தானின் ஆப்பிள் (நிறைவுப் பகுதி)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 class="post-title entry-title" itemprop="name" style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-stretch: normal; font-weight: normal; margin: 0.75em 0px 0px; position: relative;">
<span style="font-size: small;">ராகிங் என்னும் சாத்தானின் ஆப்பிள் (நிறைவுப் பகுதி)</span></h3>
<div>
================================================</div>
<div>
<br /></div>
<div>
விஜயவேல் ஊருக்குப் போயும் காது வலி என்று புலம்பியிருக்கிறான். என்னவென்று ஹாஸ்பிடலில் காட்ட, அடித்ததில் காது ஜவ்வு சற்று கிழிந்து விட்டது. வீட்டில் கேட்க, சமாளித்துப் பார்த்து, முடியாமல் உண்மையை ஒத்துக் கொண்டான். விஜயவேல் வீடிற்கு ஒரே ஆண்பிள்ளை. வீட்டில் களேபரம். விஜயவேலின் அப்பா நேராக நாமக்கல் போக்குவரத்து டிப்போ மேனேஜரிடம் சொல்ல, அவர் காலேஜ்க்கு <span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; line-height: 19.3199996948242px;">ஃ</span>போன் செய்துவிட்டார்.</div>
<div>
<br /></div>
<div>
என்ன செய்வதென்று தெரியாமல் இருக்க, வகுப்பில் வந்து செக்யூரிட்டி வந்து விஜயவேலை என்கொயரிக்காக மறுநாள் கூப்பிட்டார்கள் என்று சொல்லிவிட்டு போனான். என்கொயரிக்கு மேலும் ஒருவர் தேவை என்பதால் நானும் ரவுடிதான் பாத்துக்க என்று வாண்டடாக நானும் பெயர் கொடுத்தேன். அன்றிரவு, செகண்ட் இயர் ஹாஸ்டலில் இருந்து ஒரு செய்தி வந்தது. தெரியாமல் செய்து விட்டதாகவும், என்கொயரியில் பெயரை சொல்ல வேண்டாம் என்று சொன்னார்கள். எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது, தெரியாமல் செஞ்சதா இது என நான் கத்த, விஜயவேல் என்னை மெதுவாகப் பார்த்தான். (அன்னைக்கு என்ன போட்டு புரட்டி எடுத்தாங்க, அப்ப எல்லாம் சும்மா இருந்திட்டு இப்போ என்னடா சவுண்டு விடுற என்ற அவன் பார்வையின் அர்த்தம் புரிந்ததால்), அமைதியாகி விட்டேன். சில நண்பர்களிடம் இதைப் பற்றி கேட்ட போது, 'வேண்டாம்டா, இப்போ அவங்க பேரை சொல்லிட்டோம்னா, அடுத்த மூணு வருஷம் நிம்மதியா இருக்க முடியாதுடா, எதாவது பிரச்சினை வரும்' என்று நன்றாக தைரியம் (?!) சொன்னனர்.</div>
<div>
<br /></div>
<div>
மறுநாள் காலை 10 மணி. அட்மின் பிளாக்கில் இருந்தோம். ஒருவர் கேட்டார்,</div>
<div>
"ஏம்ப்பா. இவ்ளோ நடந்திருக்கு எங்க கிட்ட சொல்லியிருக்கக் கூடாது?"</div>
<div>
"இல்ல சார், எதுக்கு பிரச்சினைன்னு விட்டுட்டோம்"</div>
<div>
"அட என்னப்பா, உன்ன இப்டி போட்டு அடிச்சிருக்காங்க, என்ன பிரச்சினை? நாங்க பாத்துகிறோம். நீ ஆள் யாருன்னு மட்டும் காட்டுப்பா. அவனுங்கள ஒரு வழி பண்ணிரலாம்"</div>
<div>
எங்களுக்கு ஹாஸ்டல் நண்பர்கள் சொன்னது ஞாபகம் வந்தது. ஒருவேளை இப்போது நாம் போட்டுவிட்டு, அவர்களை கடுமையாக தண்டித்து, மறுபடியும் நம்மை அடித்தால்? நாங்கள் முடிவு பண்ணினோம். அவர்களை மாட்டி விடப் போவதில்லை என்று.</div>
<div>
நான்தான் பேசினேன், "சார் இருட்டுல அடிச்சாங்க. முகம் சரியா ஞாபகமில்லை சார்"</div>
<div>
சிரித்துக்கொண்டே, "ஒருத்தர் முகம் கூடவாப்பா ஞாபகம் இல்லை"</div>
<div>
"இல்ல சார்"</div>
<div>
"ஏம்ப்பா, இப்டி பயபட்றீங்க? ஆம்பள பசங்கதான நீங்க?"</div>
<div>
இந்த கேள்வியின் உக்கிரம் எங்களை மிகவும் அவமானப்படுத்தியது. நடப்பது நடக்கட்டும், மாட்டி விடலாம் என்று ஸ்டுடென்ட்ஸ் லிஸ்ட் பார்த்தோம். கொடுமை, எங்களை அடித்த ஒரு நாயின் போட்டோ கூட அந்த லிஸ்டில் இல்லை. குழப்பத்துடன், "சரியாய் தெரியல சார்" என்று சொல்லிவிட்டு ஹாஸ்டல் வந்தோம். விசாரித்தபோது, எங்களை அடித்தவர்கள், நேற்றே ஆபீஸ் பியூனிடம் பணத்தைக் கொடுத்து சரி கட்டி விட்டதாக தெரிந்தது. ஊழல் மலிந்த எங்கள் கல்லூரி நிர்வாகத்தை வைத்துக் கொண்டு, ஒன்றும் கழட்ட முடியாது என்று தெளிவாகப் புரிந்தது. விதியை நொந்து கொண்டு, அந்த சம்பவத்தை மறக்கத் தயாரானோம். மறந்து விட்டோம்.</div>
<div>
<br /></div>
<div>
(நிறைந்தது)</div>
<div>
<br /></div>
<div>
பின்னுரை: இந்த சம்பவத்தைக் கூர்ந்து கவனித்தால், இதிலும் நம் நாட்டின் பாரம்பரிய குணம் இருப்பதை அறியலாம். அது நம் ரத்தத்தில் ஊறிய கோழைத்தனம். அடிக்க வந்தவர்கள் வெறும் 4 பேர். நாங்கள் மொத்தம் 80 பேர். இதில் கால்பங்கு நண்பர்கள் ஒன்று கூடியிருந்தால், அந்த நாய்களை பிரித்து மேய்ந்திருக்கலாம். ஆனால் எது எங்களைத் தடுத்தது? இன்றும் யோசிக்கிறேன், விடை மட்டும் கிடைக்கவில்லை.</div>
<div>
<span style="font-size: x-small;"><br /></span></div>
</div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-66817367765316729622015-03-09T10:43:00.000-07:002015-03-10T01:28:27.158-07:00ராகிங் என்னும் சாத்தானின் ஆப்பிள் (பகுதி-1)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b>ராகிங் என்னும் சாத்தானின் ஆப்பிள் (பகுதி-1)</b><br />
<b>==========================================</b><br />
<b>(மன்னிக்கவும் நண்பர்களே. மிகவும் நீளமான பதிவாக இருப்பதால் இரண்டு பதிவுகளாக போட வேண்டிய நிலை)</b><br />
ராகிங். கல்லூரிப் பருவத்தைக் கடந்த அனைவரும், ஒரு முறையாவது இந்த கொடுமையை அனுபவித்திருக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் பாக்கியசாலிகள். அப்படி நானும், என் நண்பர்களும் ஒருமுறை மாட்டிக் கொண்ட நிகழ்வே இந்த பதிவு.<br />
<br />
இன்ஜினியரிங் படிப்பை விட, ராகிங்ஙை நினைத்துதான் எனக்கு அதிக பயம் இருந்தது. போதாக் குறைக்கு, பள்ளி சீனியர்கள் வேறு இன்ஜினியரிங் காலேஜில்தான் ராகிங் நிறைய இருக்கும் என்று பில்ட்-அப் கொடுத்தனர். இதனால் முதல் இரண்டு மாதங்களுக்கு சீனியர் யாரைப் பார்த்தாலும் எச்சில் முழுங்குவேன். ஆனால் கல்லூரி நிர்வாகம் ராகிங்கைத் தடுக்க பல முயற்சிகளை எடுத்தது. எங்கு சென்றாலும் செக்யூரிட்டியை அனுப்புவது, இரவு வரை லேக்சரர்களை ஹாஸ்டலில் அமர வைப்பது என்பன. இதனால் ஏறக்குறைய ஐந்து மாதம் ராகிங்கின் நிழல் கூட படாமல் ஜாலியாக இருந்தோம். இருப்பினும் சில சீனியர்கள் எங்களைப் பார்க்கும் போது, உங்களுக்கு இருக்குடி ஒரு நாள் என்பது போல் இருக்கும். மனதிற்குள் பயம் பீறிட்டாலும், காட்டிக்கொள்ளாமல் இருந்தோம்.<br />
அன்று எங்கள் ஹாஸ்டலே அல்லோல-கல்லோலப் பட்டது. அன்றிரவு இரண்டாமாண்டு சீனியர்கள் ஹாஸ்டலில் புகுந்து, எல்லாரையும் அடி பின்னப் போகிறார்கள் என்று வதந்தி பரவியது. ஆனால், அது வதந்தி இல்லை, 100% உண்மை என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனக்கு அப்போதிருந்தே பயம் தொற்றிக் கொண்டது. சும்மாவே பயப்படுவேன். இதைக் கேட்டதிலிருந்து, அடிக்கடி பாத்ரூம்க்கு ஓடிக் கொண்டிருந்தேன். விஜயவேலிடம் ,<br />
"அது எப்படிடா செக்யூரிட்டி இருக்கும்போது உள்ள வர முடியும்" என கேட்டேன்.<br />
"நீ என்ன லூசா சித்தப்பு? போன வாரம் XXXXXX-ஐ (பெயர் ஞாபகம் இல்லை) கூட்டிட்டு போய் புரட்டி எடுத்தாங்க. அப்ப செக்யூரிட்டி இல்லையா?"<br />
"இப்ப என்னடா பண்றது?" யாரிடமும் பதிலுமில்லை. வழியுமில்லை.<br />
<br />
என் மேல மட்டும் கை வைக்கட்டும், அப்புறம் என்ன நடக்குதுன்னு பாருங்கடா என சவடால் விட்ட வெங்கி, 8 மணிக்கே பின் கேட்டின் வழியாக எஸ்ஸாகி விட்டது தெரிந்தது. அவனுடன் சேர்ந்து பாஸ்கர், ஐயர் மற்றும் சிலரும் எஸ்ஸாகி விட்டனர். எனக்கு அதற்கும் தைரியம் இல்லை.<br />
<br />
9 மணி. எல்லோரும் மரண பீதியில் இருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து, கீழ் பிளாக்கில் ஒரே கூச்சல். B18 கோதண்டம், சீனியர்ஸ் வந்துட்டாங்க. செம அடி விழுதுடா என்று கத்தியவாறு வந்தான். எல்லாருக்கும் அட்ரினலின் வேகமாக சுரந்தது. கீழ் பிளாக்கில் முடித்து விட்டு, சீனியர்கள் மேலே வந்தனர். எங்கள் அறைக்கு வந்தவன் செகண்ட் இயர் EEE கார்த்திக். என் கண்களுக்கு ஜீன்ஸ் போட்ட இடி அமீன் மாதிரி தெரிந்தான், என்ன பண்ணப் போகிறான் என்று நினைத்துக் கொண்டிருக்க,<br />
"ஏண்டா அப்பவே வரல?"ன்னான்.<br />
"இல்லன்னா, அவர் தான்" என்று என் நண்பன் சொல்ல வந்தாஆஆஆன்ன்ன்ன்.<br />
பளார். பளார். நண்பனின் கன்னம் பழுத்தது.<br />
பொறி கலங்கியது அனைவருக்கும். "எதித்தா பேசுற"!!!<br />
அடுத்த பார்வை என் மேல் விழுந்தது. நான் சிலை போல் நிற்க, எனக்கும் அதேபோல் இரண்டு பளார் விழுந்து, காதில் பூச்சி பறந்தது.<br />
<br />
கொஞ்ச நேரம் எங்கு பார்த்தாலும் பளார், தப், டம் சத்தங்கள். இந்த களேபரங்கள் முடிய அறை மணி மன்னிக்க, அரை மணி நேரம் ஆனது. சரி தூங்கலாம் என கிளம்பியபோது விஜயவேல் மட்டும் காதைப் பிடித்துக் கொண்டு, காது ரொம்ப வலிப்பதாக சொன்னான். சரி தூங்குடா பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு நான் தூங்கினேன். காலையில் விஜயவேல் ஊருக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தான். அப்போதும் காது வலிப்பதாக சொன்னான். பின்னர் திங்கள் காலை 7 மணிக்கு ஹாஸ்டல் வந்தான், கூடவே ஒரு பிரச்சினையோடு.<br />
<br />
(அடுத்த பகுதியில் நிறைவுறும்)</div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-81664536270359308122015-03-08T11:12:00.000-07:002015-03-08T11:12:46.823-07:00மறக்க முடியாத கேரம் போர்ட் (நிறைவுப் பகுதி)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">மறக்க முடியாத கேரம் போர்ட் (நிறைவுப் பகுதி)</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">============================================</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">எங்களை ஏன் விதி இப்படி சுற்றி சுற்றி அடிக்கிறது? எங்களை விட வெங்கி மிகவும் மோசமான நிலையில் இருந்தான். நடப்பதை இப்போது சொன்னாலும் பிரச்சினை: செருப்படி விழும். சொல்ல விட்டாலும் பிரச்சினை: ஒருவேளை அப்பாவைக் கூட்டி வருவதுதான் இறுதியென்றால், இதை அப்பவே சொல்ல என்னடா என்று டபுள் செருப்படி விழும். புலம்பிக் கொண்டே இருந்தான்.</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"நாளைக்கு எனக்கு சங்கு நிச்சயம்டா"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. நாங்கள் மட்டும் யோக்கியமா? அதே செருப்படி எங்களுக்கும் நிச்சயம்!</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">வெங்கியின் அப்பா ஹாஸ்டல்க்கு வந்த போது காலை 7 மணி. எங்களைப் பார்த்து, "எப்படிப்பா இருக்கீங்க?"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"நநல்ல்ல்லாலாலா இருக்கோம்ப்பா"</span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"ஏன் டல்லா இருக்கீங்க?"</span></span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"வந்து, வந்து,டெஸ்ட்க்கு நைட் முழிச்சு படிச்சோம்"</span></span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"பரவயில்லையே? மன்த்லி டெஸ்ட்கே இந்த ப்ரிபிரேஷனா? குட்"</span></span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 19.3199996948242px;">எங்கள் மனசாட்சி கெக்காளமிட்டு சிரித்தது.</span></span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span></span>
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 19.3199996948242px;">இதற்க்கு மேல் முடியாது, உண்மையை சொல்லி விடுவது என்று முடிவு செய்து, வெங்கி அப்ரூவர் ஆனான். அப்போதே வெங்கி சுக்கு நூறாய் கிழிக்கப்பட்டான். நாங்கள் கொஞ்சமாய் கிழிக்கப்பட்டோம்.</span></span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 19.3199996948242px;">HOD-ஐப் பார்க்க வெங்கியும், அப்பாவும் காத்துக் கொண்டிருந்தார்கள். முதல் & இரண்டாவது இயர் மாணவர்களிடையே ஏதோ ராகிங் பிரச்சினை ஏற்பட்டு, HOD கடும் கோபத்தில் இருப்பதாகத் தகவல் பரவியது. அய்யோ, இது வேறயா? இருந்த 1% நம்பிக்கையும் போயிற்று. ஹாஸ்டல் பிரச்சினையை அடுத்து, என் கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. </span></span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 19.3199996948242px;">வெங்கியும், அப்பாவும் HOD அறைக்குள் சென்றனர். நாங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தோம். உண்மையில் செமெஸ்டர் ரிசல்ட்டுக்குக் கூட இவ்வளவு பதட்டம் அடைந்ததில்லை. கால் மணி நேரம் கழித்து வந்தார்கள். ஆச்சர்யம், வெங்கி முகத்தில் சிறு பிரகாசம். எங்களுக்குப் புரியவில்லை. அப்பா எங்களை அழைத்தார்.</span></span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"இனிமேலாச்சும் ஒழுங்கா படிக்கிற வேலையப் பாருங்கப்பா. வரேன்"</span></span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 19.3199996948242px;">அதிர்ச்சி+குழப்பம்+சந்தோஷம். "என்னாச்சுடா?", நாங்கள் பதற, வெங்கியின் </span></span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">ஃப்ளாஷ்பேக் இங்கே ஆரம்பிக்கிறது. சர்ர்</span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">ர்ர்</span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">ர்ர்</span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">ர்ர். HOD அறை.</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"குட் மார்னிங் சார். நான் வெங்கடேசன் </span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">ஃபாதர்"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"குட் மார்னிங். உங்க பையன் பண்ணதப் பாத்தீங்களா?"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"கேள்விப் பட்டேன் சார்"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"இவங்களுக்குக் கஷ்டப்பட்டு பாடம் நடத்தி, அதில டெஸ்ட் வச்சா ஸ்கிப் பண்றாங்க. HOD டெஸ்ட்க்கே இந்த மரியாதை"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"சார் என்னது, உங்க டெஸ்ட்க்கு மட்டம் போட்டங்களா? எவ்ளோ திமிர்? இவன சும்மா விடக் கூடாது சார்". அடிக்கக் கை ஓங்குகிறார்.</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"சார் ப்ளீஸ் வேணாம்"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"இல்ல சார், இவனுக்கு ரொம்ப கொழுப்பு ஏறிடுச்சு. இல்லன்ன HOD உங்க டெஸ்ட்ட ஸ்கிப் பண்ணுவானா? இவன வெட்டிப் போட்டாக் கூடா தப்பில்ல"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"சார் ப்ளீஸ். இந்த ஒரு வாட்டி வி </span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"></span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">ஃபர்கிவ் தெம்"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"நீங்க சொல்றீங்கனு விட்றேன் சார். இல்லன்னா இவன!!!"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"நான் பாத்துகிறேன் சார். யு கூல் டவ்ன்"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">சர்ர்</span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">ர்ர்</span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">ர்ர்</span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">ர்ர்</span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">ர்ர்</span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">ர்ர். </span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">ஃப்ளாஷ்பேக் முடிந்தது.</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">எங்களுக்கு சந்தோசத்தில் என்ன பண்ணுவதேன்றே புரியவில்லை. HOD அழைத்தார்.<br />"பாத்தீங்களா? உங்களால பேரன்ட்ஸ்க்கு எவ்ளோ கஷ்டம்"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">மவுனம்.</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"ஆல்ரைட். திஸ் இஸ் தி லாஸ்ட் டைம். நீங்க காலேஜ் டே, ஹாஸ்டல் டே என்ஜாய் பண்ற இந்த த்ரீ டெஸ்ல உங்கள இவ்ளோ படுத்தினதே போதும்னு நினைக்கிறேன். நீங்க என்ன பண்றீங்கன்னா, TV டெஸ்ட் பேப்பர் எல்லா கொஸ்டின்க்கும் ஆன்ஸர் எழுதி சப்மிட் பண்ணிட்டு, ரெகார்ட்ல சைன் வாங்கிக்கிங்க"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"சார், தேங்க் யு வெரி மச் சார்"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"அத </span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">வெங்கடேசன் </span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">ஃபாதர்க்கு சொல்லுங்க. யு கேன் லீவ் நவ்".</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">இவ்வளவு எளிதில் இந்த சிக்கலில் இருந்து மீள்வோமென நினைக்கவில்லை. எல்லாம் கனவு போல் இருந்தது. தூக்கு தண்டனைக் கைதிக்கு திடீரென்று ஜனாதிபதியின் கருணை மனுவின் மூலம் விடுதலை கிடைத்தது போல் இருந்தது. பாரதிராஜா படம் போல், ஒன்றல்ல நிறைய அதிர்ஷ்ட தேவதைகள் என்னைச் சுற்றி ஆடுவது போல் இருந்தது. அப்புறமென்ன, சுகி சிவத்தின் பேச்சைக் கேட்க திறந்த வெளி அரங்கிற்குப் பறந்தோம். </span><br />
(முடிந்தது)<br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">பின்னுரை: இப்போது அந்த </span><span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.3199996948242px;">கேரம் போர்ட் யாரிடம், எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை. அப்படியே இருந்தால் அவர்களுக்கு இரண்டு கோரிக்கைகள்:</span></span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.3199996948242px;">1. TV டெஸ்ட் அன்று கேரம் போர்ட் விளையாட வேண்டாம்.</span></span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.3199996948242px;">2. மாட்டிக் கொண்டால், தயவு செய்து HOD மகளிடம் பேச வேண்டாம்.</span></span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span></div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-16508357525690500222015-03-08T00:23:00.000-08:002015-03-08T00:23:32.750-08:00மறக்க முடியாத கேரம் போர்ட் (Part-3)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">மறக்க முடியாத கேரம் போர்ட் (Part-3)</span><br style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;" /><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">===================================</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">HOD-ன் வீட்டு கேட்டின் முன் நாங்கள் நின்ற போது மணி 5:00. கேட்ட்டைத் தட்டினோம். யோரோ வருவது தெரிந்தது. HOD வருவார் என நினைக்க, ஒரு பெண் வந்தார். வயது 18 இருக்கலாம். HOD-ன் மகளாய் இருக்கலாம்.</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"யாருங்க, என்ன வேணும்"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">எங்களிடையே மவுனம். யார் பேசுவது என்று குழப்பம். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">சித்தப்பு, பேசுடா என்று கிசுகிசுத்தனர். "டேய், நீங்க பேசுங்கடா"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"நீ ட்ரெஷரர் டா. அதனால நீ பேசினா கரெக்டா இருக்கும்டா"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"உங்களுக்கே ஓவரா இல்லையா. நான் </span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">ட்ரெஷரர்னு HOD பொண்ணுக்கு எப்டிடா தெரியும்"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"></span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"மாமா,அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"அப்புறமா பாத்து, பாத்துதான்டா இப்டி கேட் வாசல்ல நிக்கிறோம்"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">கேட் திறக்கப் பட்டது. "யாருங்க"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"பீட்டர் சார் இல்லையாங்க"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"அப்பா ஒரு </span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">ஃபங்ஷன்க்கு போயிருக்கார், வர்றதுக்கு நைட் ஆகும்".</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">'சரிங்க, வந்தா நாங்க வந்தோம்னு சொல்லுங்க"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"நீங்க?"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"தேர்ட் இயர் ECE ஸ்டுடென்ட்ஸ்னு சொல்லுங்க"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"ஓகே".</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"தேங்க்ஸ்"னு சொல்லிவிட்டு கிளம்பினோம். இந்த பிளானும் புஸ்ஸாகி விட்டதே. அடுத்து என்ன செய்யலாம் என்று பஸ்ஸில் போகும்போது யோசித்தோம். ஒன்றும் சரிப்படவில்லை.</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">மறுநாள் காலேஜ் போனோம். சுமார் 11 மணிக்கு எங்களை HOD கூப்பிட்டார். அப்பாடா, ப்ளான் வேலை செய்கிறது. பாலசுப்ரமணியம் பெருமை மிகுந்த முகத்துடன் முன்னே செல்ல, நாங்கள் பின் தொடர்ந்தோம். அதிர்ஷ்ட தேவதையை நினைத்துக் கொண்டேன்.</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">உள்ளே சென்றோம். "வாங்கய்யா"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">மெதுவாய் சிரித்தோம்.</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"யாருய்யா என் டாட்டர் கிட்ட மிரட்டுற மாதிரி பேசுனது?"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">எங்கள் தலையில் சம்மட்டி விழுந்தது. "சார், நாங்க" என இழுத்தோம்.</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"தப்பு மேல தப்பு பண்றீங்க. இது காலேஜ் மேட்டர். இத ஏன் நீங்க வீட்ல வந்து பேசணும்? ஐ டோன்ட் லைக் இட்"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">நாங்கள் பேயறைந்து நிற்க,</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"நீங்க வீட்டுக்கு வர தேவையில்ல. அதுவும் இல்லாம டாட்டர் கிட்ட தேவையில்லாம பேசி, வாட் நான்சென்ஸ்? அதான், தெளிவா சொல்லிட்டேனே, உங்க பேரன்ட்ஸ் இல்லாம வராம ஐ கான்ட் டு எனிதிங். யு கேன் லீவ் நவ்"</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">அதிர்ஷ்ட தேவதை "போடா, நீயுமாச்சு உன் </span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">கேரம் போர்டும் ஆச்சு" என மொத்தமாக பறந்தாள். அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டு, சாவை எதிர்நோக்கிய தூக்கு தண்டனைக் கைதி போல் இருந்தது எங்கள் நிலை. அப்பாவைக் கூப்பிட்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. அப்பாவிடம் எப்படி கதையை ஆரம்பிக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தபோது,</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"இந்த ஐடியா குடுத்த </span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">பாலசுப்ரமணியம் எங்கடா. அவனை" என வெங்கி கத்தினான்.</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">ஆளைக் காணோம். வழக்கமாக 7-B பஸ்ஸில் போகிறவன், அப்போதே எஸ்ஸாகி விட்டது தெரிந்தது. எல்லாம் எங்கள் நேரம் என்று நொந்து கொண்டொம்.</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">மறுபடியும் ஹாஸ்டல். இரவு மணி 8. இன்னும் ஒரு நாளில் ஹாஸ்டல் & காலேஜ் டே வருகிறது. வருடத்தில் இந்த மூன்று நாட்கள் தான் காலேஜ் ஜேஜேவென இருக்கும். நாளை மதியம் சுகி சிவம் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சி என்று யாரோ மைக்கில் பேசியது கேட்டது. எதிலும் மனம் லயிக்கவில்லை. </span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">வெங்கியின் செல்</span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">ஃபோன் அடித்தது. எடுத்துக்கொண்டு வெளியே போனான். சற்று நேரம் கழித்து தொங்கிய முகத்துடன் வர,</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"என்னாச்சுடா" என்று கேட்டேன்.</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"எங்க அப்பா பேசினார்டா, நாளைக்கு காலேஜ் வர்றாராம்."</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">(தொடரும்)</span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 19.3199996948242px;"></span></span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span></div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-45666603285213989142015-03-07T10:04:00.000-08:002015-03-07T10:04:10.551-08:00மறக்க முடியாத கேரம் போர்ட் (Part-2)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">மறக்க முடியாத கேரம் போர்ட் (Part-2)</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">===================================</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">7வது 8வது பீரியட்களில் மனது ஒட்டவில்லை. சும்மாவே கவனிக்க மாட்டோம். இதில் HOD சொன்னது மனதில் ரீங்காரமிட, இதை எப்படி சமாளிப்பது என்பதிலேயே மனம் சுற்றியது. காலேஜை முடித்து, ஹாஸ்டல்க்கு வந்து, யாருக்கும் முகத்தில் ஈ ஆடவில்லை. அன்றைய இரவு, எங்கள் மெஸ்ஸில் உருப்படியாக போடப்படும் சப்பாத்தி. நான், ஐயர் எல்லாம் போட்டி போட்டு 10 சப்பாத்தி சாப்பிடுவோம். இந்த பிரச்சினையால் அன்று சரியாக சாப்பிடவில்லை என்று ஜல்லியடிக்க விரும்பவில்லை. அன்றும் வயிறு முட்ட 10 சப்பாத்தி சாப்பிட்டேன்!!!</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">சாப்பிட்டு வந்து, அடுத்து என்ன செய்யலாம் என்பதைத் தீர்மானிக்க செவ்வக மேஜை மாநாடு ஆரம்பித்தது (எங்கள் ரூமில் வட்ட மேஜை கிடையாது!). யோசனைகள், வியூகங்கள், திட்டங்கள் பலவும் வந்தன. சம்பந்தம் இல்லாமல் வெங்கி சிரித்தான். என்னவென்று கேட்டால்,</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"இல்ல, நம்மெல்லாம் ஹாஸ்டல்ல இருக்கோம். என்னமாவது சொல்லி சமாளிக்கலாம். டே ஸ்காலர் பாஸ்கர், பாலா-இவனுங்க வீட்டில் சொல்வானுங்கனு நெனச்சேன்."</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">வெங்கி சொன்னது சிறப்பான இருண்மை நகைச்சுவை(black comedy) என்றாலும், அதை ரசிக்கும் நிலையில் அங்கே யாருமில்லை. சற்று என்னைப் பற்றி யோசித்தேன். நான் படிப்பது, ஹாஸ்டல், மெஸ்-அனைத்தும் கடன். மிக சிரமத்தில்தான் நான் படித்து வந்தேன். இப்போது போய், </span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">கேரம் போர்ட் விளையாடி டெஸ்ட்க்கு மட்டம் அடித்ததால், காலேஜில் கூப்பிட்டார்கள் என சொன்னால் செருப்படி விழும். காலேஜ்க்கு வருவது கூட அவர்களுக்குப் பிரச்சினையில்லை. நம் கஷ்டப்பட்டு பணம் அனுப்பினால் இவன் இங்கே திமிரெடுத்து சேட்டை செய்கிறானே என்ற கோபம்தான் அதிகம் வரும். நிச்சயம் அதை சாந்தப் படுத்த முடியாது. கிட்டத்தட்ட அனைவரின் நிலையும் அதே. எனவே பெற்றோரை அழைத்து வருவது நிச்சயம் முடியாத விஷயம். HOD-ஐ எப்பாடு பட்டாவது சமாளித்தே ஆக வேண்டும். </span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">எங்கள் செவ்வக மேஜை மாநாடு தோல்வியில் முடிந்தது. உருப்படியாக யோசனை ஒன்றும் வரவில்லை. ஆனது ஆகட்டும் என தூங்கி விட்டோம். மறுநாள், வேறு வழியே இல்லை. HOD-யை போய் பார்ப்பது என முடிவு செய்யப் பட்டது. ஆனால் HOD அன்று லீவ். பாலசுப்ரமணியம் ஒரு ஐடியா சொன்னான்.</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">"மாமா (என்னைத்தான்), நம்ம போய் HOD-ஐ வீட்டில் பார்த்தா என்ன?"</span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 19.3199996948242px;">நாங்கள் குழப்பத்துடன் அவனைப் பார்த்தோம். வீட்டில் எப்படியும் நல்ல மூடில் இருப்பார். நாம் போய் பார்த்து மன்னிப்பு கேட்டால், மனமிறங்கி வர சாத்தியக் கூறுகள் நிறைய இருப்பதாகச் சொன்னான். சரியோ, தவறோ முயன்று பார்க்கலாம் என்று HODஐ பார்க்க சித்தோடு கிளம்பினோம். திரும்பவும் அதிர்ஷ்ட தேவதை அருகில் வருவது போல் தெரிந்தது. ஆனால், விதி HOD-ன் மகள் வடிவத்தில் அங்கே காத்துக் கொண்டிருந்தது.</span></span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span></span>
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 19.3199996948242px;">(தொடரும்)</span></span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span></div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-33129408411320484262015-03-06T23:54:00.001-08:002015-03-06T23:54:30.285-08:00மறக்க முடியாத கேரம் போர்ட் (Part-1)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மறக்க முடியாத கேரம் போர்ட் (Part-1)<br />
===================================<br />
(வணக்கம் நண்பர்களே. நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதும் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி காலங்கள் பகுதியின் அடுத்த மினி-தொடர்)<br />
<br />
அது ஆறாவது செமஸ்டர். எங்களிடையே அப்போது ஒரு கேரம் போர்ட் புழக்கத்தில் இருந்தது. அதை கேரம் போர்ட் என்று சொன்னால் மற்ற கேரம் போர்ட் எல்லாம் சேர்ந்து அடிக்க வரும். கேரம் போர்ட் பவுடர்க்கு பதிலாக பாண்ட்ஸ், கோகுல் சாண்டல், நைசில் என சகட்டு மேனிக்கு முக-பவுடர்களைப் போட்டதால், கேரம் போர்டின் ஆதார வழவழப்பே தேய்ந்து, ஆங்காங்கே திட்டு-திட்டாய் பேர்ந்து போய், அதன் கடைசி காலங்களை எங்களிடையேகழித்துக் கொண்டிருந்தது. எங்கள் கேரம் போர்டில் பேக்-ஷாட் அடிக்க வேண்டுமானால்,உயிரை வெறுத்து அடிக்க வேண்டும், இல்லையேல் ஸ்ட்ரைக்கர் பாதியிலேயே நின்று விடும். எல்லாம் பாண்ட்ஸ் பவுடர்களின் மகிமை. இப்படி சரித்திர சிறப்பு வாய்ந்த கேரம் போர்ட்தான் எங்களை மூன்று நாள் பாடாய்ப் படுத்தி விட்டது.<br />
<br />
அன்று TV என்று அழைக்கப்பட்ட Television Engineering-ன் மாதாந்திர டெஸ்ட். (TV HOD பீட்டர் அவர்களால் கர்ம சிரத்தையுடன் எடுக்கப்பட்ட பேப்பர் என்பது சிறப்பம்சம். ப்ரொஜெக்டர் எல்லாம் கொண்டு வந்து நடத்துவார்). எங்கள் ரூமில் காலை எழுந்ததே 8 மணிக்கு. நான், ஐயர், வெங்கி, வீராசாமி, பரணி மற்றும் சிலர் (சரியாக ஞாபகம் இல்லை), டெஸ்டுக்கு மட்டம் அடித்து விட்டு கேரம் போர்ட்விளையாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மதியம் வரை விளையாடி விட்டு, 12:40க்கு லஞ்ச் சாப்பிட மெஸ்க்கு போய் விட்டோம். திரும்பி அறைக்கு வந்த போது பால்பாண்டி,<br />
<br />
"ஏண்டா டெஸ்ட்க்கு வரல"ன்னான்.<br />
<br />
"ஏன்டா, என்னாச்சு"<br />
<br />
"கவுன்ட் கம்மியா இருந்ததால, யார் யார் டெஸ்ட்க்கு வரலன்னு HOD லிஸ்ட் எடுத்துட்டு போயிட்டார்டா"<br />
<br />
உள்ளுக்குள் பயம் வந்தாலும், "இதெல்லாம் புதுசாடா. பாத்துக்கலாம்".<br />
<br />
"நம்ம டெஸ்ட்க்கு போயிருக்கனும்டா. இப்ப பார், தேவையில்லாம பிரச்சினை"ன்னான் வெங்கி.<br />
<br />
"சரி விட்ரா, நடப்பதைப் பார்ப்போம்".<br />
<br />
டெஸ்ட்க்கு மட்டம் அடித்த கணவான்கள் ஒன்று கூடி, HOD வழக்கமாக இதையெல்லாம் மறந்து விடுவார். அப்படியே கூப்பிட்டாலும், மொத்தமாக சேர்ந்து மன்னிப்பு கேட்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.<br />
"சரி, என்னன்னு காரணம் சொல்றது"?<br />
"உடம்பு சரி இல்லன்னு சொல்வோம்"<br />
"அஞ்சு பேருக்கும் ஒன்னாவா? உருப்படியா சொல்றா"<br />
"நைட் ஹோட்டல்ல சாப்டது வயித்துக்கு ஒத்துக்கல, டிசன்ட்ரினு சொல்லலாமா"?<br />
"நம்ப மாட்டார்டா"<br />
"டெஸ்ட்க்கு சரியா படிக்கல. அதனால பயத்தில கட் பண்ணிட்டோம்னு சொன்னா?"<br />
"கொஞ்சம் ஓகேவா படுது. சரி மொதல்ல கூப்பிடட்டும்".<br />
<br />
ஆறாவது பீரியட் HOD-யுடையது. மணி 2:30. எங்களுகெல்லாம் வயிற்றில் அமிலம் சுரந்து கொண்டிருந்தது. கால் மணி நேரம் ஆகியும் HOD வரவில்லை. அதிர்ஷ்ட தேவதை அருகில் இருப்பது போல இருந்தது. அப்போதைய ரெப் E.மணி வந்து,<br />
"டெஸ்ட்க்கு யாரெல்லாம் வரலையோ, அவங்கள HOD கூப்பிடறார்".<br />
அருகில் தெரிந்தது அதிர்ஷ்ட தேவதை இல்லை, ஆப்பு என்று தெரிந்தது. கிளம்பினோம். HOD ரூமில், பாலமுருகன், பாலசுப்ரமணியம், D.பாஸ்கர்- இவர்களைப் பார்த்தபோது, இவர்களுக்கும் மூல காரணம் கேரம் போர்டாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டேன்.<br />
<br />
கதவைத் திறந்து உள்ளே சென்றோம். சுமார் கால் மணி நேரம். ருத்ர தாண்டவம் ஆடினார். அடிக்காத குறை. தமிழ், ஆங்கிலம் என பாரபட்சம் இல்லாமல் திட்டினார். HOD அவர்களுக்கு மற்ற மொழிகள் தெரியாமல் இருந்தது நாங்கள் செய்த புண்ணியம் என்று பட்டது. சரி, எல்லாம் முடிந்து மன்னித்து விடுவார் என நம்பிக் கொண்டு இருந்தோம். அதற்க்கும் சேர்ந்தே ஆப்பு வந்தது.<br />
"உங்களை இந்த வாட்டி சும்மா விடக்கூடாது. நீங்க எல்லாரும் உங்க பேரன்ட்ஸக் கூப்பிட்டு வராம, எந்த ரெகார்ட் நோட்லயும் சைன் பண்ண மாட்டேன்"<br />
"சார்" என நாங்கள் இழுக்க,<br />
<br />
"கெட் அவுட் ஆல் ஆஃப் யு" என கத்தினார்.<br />
<br />
எனக்கு முழுவதும் இருட்டிக் கொண்டு வந்தது.<br />
<br />
(தொடரும்)<br />
<br />
<br />
<br />
<br /></div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-46581823271877496242015-01-11T09:14:00.001-08:002015-01-11T09:17:12.604-08:002015 புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
2015 புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்<br />
<br />
1. ஓ பக்கங்கள்---- ஞாநி.<br />
2. புதுமைப் பித்தனின் சிறுகதைகள் ----- புதுமைப் பித்தன்<br />
3. ஒரு புளிய மரத்தின் கதை ----- சுந்தர ராமசாமி<br />
4. எரியும் பனிக்காடு ----- P.H.டேனியல்<br />
5. சூடிய பூ சூடற்க ---- நாஞ்சில் நாடன்<br />
6. நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ------ நாஞ்சில் நாடன்<br />
7. கடவுள்களின் பள்ளத்தாக்கு ----- சுஜாதா<br />
8. அனுமதி ----- சுஜாதா<br />
9. பாதி ராஜ்யம் ---- சுஜாதா<br />
10. அந்தோன் சேகவ் சிறுகதைகளும், குறுநாவல்களும் ---- அந்தோன் சேகவ் (Anton Chekhov)<br />
11. பேசும் பொம்மைகள் ----- சுஜாதா<br />
12. பசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) ---- K.ஸ்ரீதர்<br />
13. 50 More Detective Stories ---- Robert H.Weinberg.<br />
<br />
மேலும் சில புத்தகங்கள் வாங்குவதாக இருந்தேன். பட்ஜெட் பிரச்சினையால் இத்தோடு நிறுத்த வேண்டியதாயிற்று. இதற்கே Rs.2000க்கு மேல் ஆகி விட்டது. 2016-ல் வாங்கப்படும் என்று நம்புகிறேன். அன்பர்களுக்குப் புத்தகங்கள் படிப்பதற்குத் தரப்படும். விருப்பமுள்ளவர்கள் அணுகலாம், நிபந்தனைகளுக்கு உட்பட்டது .<br />
<br />
நிபந்தனைகள்.<br />
1. இதையா வாங்கின என்று கிண்டல் செய்யக்கூடாது.<br />
2. புத்தகம் சேதமாகாமல் இருக்க வேண்டும்.<br />
3. வாங்கிய புத்தகங்களை சொல்லியாயிற்று. அந்த புத்தகம், இந்த புத்தகம் வாங்கவில்லையா என்று கடுப்படிக்கக் கூடாது.<br />
4. முக்கியமான நிபந்தனை: கண்டிப்பாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.</div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-8325391335856402762014-11-29T23:41:00.000-08:002014-11-29T23:41:05.008-08:00உஸ்தாத் ஹோட்டல் (Ustad Hotel) விமர்சனம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உஸ்தாத் ஹோட்டல் (Ustad Hotel) விமர்சனம்.<br />
<br />
நேற்று இரவு நீண்ட நாட்களாகப் பார்க்க விரும்பிய 'உஸ்தாத் ஹோட்டல்' மலையாளப் படத்தைப் பார்த்தேன். கேரளாவின் புகழ்மிக்க நடிகர் திலகனின் கடைசி படம். தந்தையின் விருப்பத்தை மீறி சுவிட்சர்லாந்தில் சமையல் கலை படிக்கும் துல்கர் சல்மான், தன் தாத்தா திலகனின் நஷ்டத்தில் இயங்கும் ஒரு பழமையான ஹோட்டலை எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் ஒன்-லைன். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட கதை. ஆனால் துல்கர், திலகனின் நடிப்பு, தேர்ந்த திரைக்கதை, உறுத்தாத மெல்லிய இசை- இவையெல்லாம் சேர்ந்து ஒரு அருமையான பீல்-குட் படம் பார்த்த திருப்தியைத் தருகின்றன.<br />
<br />
சினிமாவை நேசிக்கும் பலரும் சொல்வது யாதெனில் ஒரு திரைப்படத்தின் ஆன்மா நல்ல திரைக்கதை. அது சரியில்லையெனில், மற்ற சமாச்சாரங்கள் எதுவும் எடுபடாது. இந்த படத்தில் அது சரியான முறையில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று நினைக்கிறன். வேண்டா வெறுப்பாக ஹோட்டல் வேலைகளைச் செய்யும் துல்கர், படிப்படியாக தன் தாத்தா ஏன் நஷ்டத்திலும் அந்த ஹோட்டலை நடத்துகிறார் என்று தெரிந்து, அதை ஏற்று நடத்த முன் வருவதை திரைக்கதை அழகாகப் படம் பிடிக்கிறது. இப்படத்தின், மற்றுமொரு பலம் காஸ்டிங். முக்கியமாக துல்கர் சல்மான். காதல், நகைச்சுவை, விரக்தி, கோபம், அழுகை என அனைத்து உணர்சிகளையும் அவரின் கண்களே எளிதாகப் பிரதிபலிக்கின்றன. நடிப்பதற்கு சில காட்சிகளே இருப்பினும், நித்யா மேனன் 'அழகாக' நடித்துள்ளார். நித்யா+துல்கர் காதல் காட்சிகள் எல்லாம் அட்டகாசம். உச்சமாக, திலகன் தன் உடல் மொழியின் மூலமே அனாயசமாக நடித்துப் பின்னியிருக்கிறார்.<br />
<br />
சமீப காலமாக கேரளாவில் நாயக பிம்பம் தவிர்க்கப்பட்டு இந்த மாதிரியான தரமான படங்கள் வர ஆரம்பித்து விட்டன. ஆனால் இங்கே? ஒரு சில நல்ல முயற்சிகள் வந்தாலும், சில முட்டாள் நடிகர்கள் தங்கள் நாயக பிம்பத்தைத் தூக்கி நிறுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் (Ex: அஞ்சான், மான் கராத்தே, etc). ஆனால் அவையெல்லாம் படு தோல்வியடைந்து, அவர்கள் முகத்திலேயே கரியைப் பூசி விட்டன. இனி நல்ல திரை மொழி இல்லாமல், வெறும் மாஸ் ஹீரோ, மசாலா, அஞ்சு பாட்டு- நாலு பைட்-மூணு காமெடி என்றெல்லாம் காலத்தை ஓட்ட முடியாது. அந்த வகையில், மலையாளத் திரையுலகம் நம்மை முந்திக் கொண்டது என்றே எண்ணுகிறேன். அதற்க்கு இன்னுமொரு சான்று இந்த 'உஸ்தாத் ஹோட்டல்'.<br />
<br />
இந்த படத்தை உலக சினிமா, மாற்று சினிமா என்றெல்லாம் ஜல்லியடிக்க விரும்பவில்லை. ஆனால் இரண்டு மணி நேரம் உருப்படியாக செலவு செய்து பார்க்கக் கூடிய ஒரு தரமான பொழுது போக்குத் திரைப்படம். அவசியம் பாருங்கள்.<br />
<br />
பி.கு. 2012-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான விருது உட்பட மூன்று தேசிய விருதுகள் மற்றும் பல்வேறு விழாக்களில் விருதுகளைக் குவித்தது.</div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-44630398852005958942014-04-22T11:04:00.002-07:002014-04-22T11:04:25.415-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சலூன் கடை- அன்றும், இன்றும் <br />
===============================<br />
<br />
அன்று- 2007, IRTT, ஈரோடு<br />
<br />
அப்போது எங்களுக்கு 3வது செமஸ்டர். முடி வெட்டப் போனால் மொத்தமாக நான்கு, ஐந்து பேராய்தான் போவோம். பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை காலை சாப்பிட்டு இல்லை சாப்பிடாமல் போவோம். அன்று நான், நண்பர்கள் அய்யர் (அருண்), ரவிந்தர், வெங்கி, விஜயவேல் என ஐந்து பேர் முடி வெட்டக் கிளம்பினோம். நான் 3வதாக முடி வெட்ட உட்கார்ந்தேன்.<br />
மூன்று<br />
நான் "இன்னும் கொஞ்சம் சைடுல கட் பண்ணுங்க".<br />
<br />
"தம்பி,இதுக்கு மேல ஷார்ட்டா வெட்டுனா ஒரு மாதிரி இருக்கும்பா"<br />
<br />
"எந்த மாதிரியாவும் இருக்காது. அதுக்குத் தக்க சென்டர்ல கட் பண்ணிடுங்க"<br />
<br />
"இப்போ ஓகே வா தம்பி?"<br />
<br />
"இன்னும் கொஞ்சம் சைடுல"<br />
<br />
"டேய் படுத்தாதடா. இப்பவே மணி 12. லஞ்ச்க்குள்ள நம்ம ஹாஸ்டல்க்கு போகணும்" என்றான் வெங்கி.<br />
<br />
"சரிடா, கத்தாத"..<br />
<br />
நான் சுமாராக ஐந்து முறை இன்னும் கொஞ்சம் சைடுல வெட்டுங்க என்று சொல்லி இருப்பேன்.<br />
<br />
இன்று- 2014, மடிப்பாக்கம், சென்னை<br />
<br />
இன்றிரவு முடி வெட்டலாம் என்று வீட்டிற்கு பக்கத்தில் இருந்த AC சலூன்க்கு சென்றேன். பின் தலையில் ரொம்ப நேரமும், சைடில் கொஞ்ச நேரம், நடுவில் சுத்தமாக வெட்டாமல், 'டன் சார்' என்றான்.<br />
<br />
"என்னய்யா விளையாட்ரியா? சென்டர்ல வெட்டவே இல்ல? நல்லா வெட்டுய்யா"<br />
<br />
"சார் சென்டர்ல" என இழுத்தான்.<br />
<br />
"சென்டர்ல என்னய்யா?"<br />
<br />
"சென்டர்ல வெட்டினா"<br />
<br />
"சென்டர்ல வெட்டின என்ன? உன் சிஸர் உடஞ்சிடுமா?"<br />
<br />
"இல்ல சார். சென்டர்ல இன்னும் வெட்டினா வழுக்கை நல்லா தெரியும்"<br />
<br />
எனக்கு சுரீரென்று உரைத்தது. அவனை சொல்லிக் குற்றம் இல்லை. லேசான காற்றுக்கே என் நடு மண்டை முடி தனியாய் தூக்கிக்கொண்டு, பப்பரப்பே என்று வழுக்கை பல்லை இளிக்கும். அந்தக் கோலத்தில் ஒரு சில ஆபீஸ் நண்பர்களே என்னைப் பார்த்து, "இவருக்கு நடு மண்டையில் முடி இருந்தால் ஹார்ட்வேர் அருண் மாதிரி இருப்பார்ல?" என்று வெகுளியாக சொல்வார்கள்.<br />
<br />
"சரி. அப்படியே வெட்டுங்க". ஒரு வழியாக 'கட்'டிங்கை முடித்து விட்டு வீடு செல்கையில், காலேஜில் முடி வெட்டியவரை நினைத்து சிரித்துக்கொண்டேன்.</div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-45727825282659751012014-04-22T11:03:00.000-07:002014-04-22T11:03:11.412-07:00தெனாலிராமன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தெனாலிராமன்<br />
===============<br />
<br />
குழந்தைகளுக்காகப் படம் எடுப்பது ஒரு வகை என்றால், குழந்தைத் தனமாகப் படம் எடுப்பது மற்றொரு வகை. இதில் தெனாலிராமன் 90% இரண்டாவது வகையான படம். சிறு வயதில் நாம் படித்த தெனாலிராமன் நீதிக்கதைகளையே நீட்டி முழக்கி திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குநர். இந்த கதைகளின் இடையே, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற மாபெரும் பிரச்சினையைச் சாமர்த்தியமாகப் புகுத்தி இருக்கிறார். அதற்கு இயக்குநருக்குப் பாராட்டுக்கள். ஆனால், படம் முழுவதையும் ரசிப்பதற்கு இந்த ஒரு அம்சம் போதாதே டைரக்டர் சார்?<br />
<br />
3 வருட 'அம்மா' வனவாசத்திற்குப் பிறகு வடிவேலுவைத் திரையில் பார்ப்பதற்குச் சந்தோஷமாக இருந்தது. வடிவேலுவின் பெரும் பலமே அவரின் காமெடி ததும்பும் உடல் மொழிதான் (mannerism). வின்னர், தலைநகரம், இங்கிலிஷ்காரன்- இந்த படங்களில் எல்லாம் வடிவேலுவின் வசனத்தை விட அவரின் உடல் மொழியே அவருக்குப் பெயரை வாங்கித் தந்தது. ஆனால் இந்த படத்தில் பக்கம், பக்கமாய் வசனமாகப் பேசியே மாள்கிறார் வடிவேலு. நமக்கு தான் சிரிப்பு வரவில்லை. சரி திரைக்கதை? தெனாலிராமன் கதைகளை விடுத்துப் பார்த்தால், வடிவேலுவை வைத்து இதைவிட சீரியஸாக எடுக்க முடியாது என்பதால் இறுதி வரை எது சீரியஸ், எது காமெடி என்று குழம்புகிறது. முன்னமே சொன்னது போல் திரைக்கதை மொத்தமுமே அமெச்சூர் தனமாக இருக்கிறது. தேறுவது தேர்ந்த கலை இயக்கம், துல்லிய ஒளிப்பதிவு மற்றும் இமானின் பின்னணி இசை.<br />
<br />
வடிவேலுவே பெரும்பான்மைத் திரைக்கதையை எடுத்துக் கொள்வதால் மற்ற எவரும் நடிப்பில் சோபிக்க வாய்ப்பில்லை. பிரியதர்ஷினிக்கு மட்டும் சற்று நல்ல பாத்திரம். ஹும், ஒருவரைப் பற்றி சொல்ல வேண்டும், அவர்-ஹீரோயின். படம் முழுக்க தொப்புள் தெரிய வலம் வருவதாலோ என்னமோ, நடிப்பு, முக பாவம், லிப் சின்க் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படவே இல்லை. சரி, அது தான் படம் முழுக்க வடிவேல் இருக்கிறாரே?<br />
<br />
மொத்தத்தில் படம்? நீங்கள் சுட்டி டிவியில் வரும் டோரா- தி எக்ஸ்ப்லோரர் பார்த்து இருக்கிறீர்களா? நம்மால் 5 நிமிடம் கூடப் பார்க்க முடியாது. ஆனால் குழந்தைகள் பயங்கரமாக ரசிப்பார்கள். அதே போல்தான் இந்த படமும். இதை குழந்தைகள் வெகுவாக ரசிக்கக் கூடும். ஆனால் நல்ல சினிமாவை எதிர்பார்த்து சென்றால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். எனவே இது, குழந்தைகளுக்காக, குழந்தைகள் மட்டுமே பார்க்கக் கூடிய படம்.<br />
<br />
பின் குறிப்பு: மான் கராத்தேவிற்கு 'தெனாலிராமன்' பல மடங்கு தேவலாம்.<br />
<br />
<br /></div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-62845067637280903972014-04-04T23:32:00.000-07:002014-04-04T23:33:19.957-07:00மான் கராத்தே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நம் தமிழ் ஹீரோக்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. இரண்டு படங்கள் ஹிட்டடித்தால் போதும். உடனே அடுத்த படத்தில் மாஸ் காட்ட நினைப்பார்கள். ஓப்பனிங் சாங், பஞ்ச் வசனம், குத்துப் பாடல், செண்டிமெண்ட் இவையெல்லாம் கண்டிப்பாய் வேண்டும் என கீழ்த்தரமான செயல்களில் இறங்குவார்கள். இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட் வரவு சிவகார்த்திகேயன். ok, படம் எப்படி? லெட்ஸ் சீ!<br />
<br />
ஒரு சில அறிமுக இயக்குனர்கள், அருமையான திரைக்கதையுடன் சில நல்ல முயற்சிகள் எடுத்து நம் சினிமாவை அடுத்த நிலைக்கு சில படிகள் மேலே கொண்டு சென்றால், சில பேர் இந்த மாதிரி குப்பை மசாலாக்களை எடுத்து பத்து படிகள் கீழிறக்கி விடுகின்றனர். அதிலும் 'மான் கராத்தே' பார்க்க முடியாத மொக்கையான குப்பை. நான் சமீபத்தில் பார்த்த 'புலிவால்' படத்தை விட மோசமான, படு அபத்தத் திரைக்கதையை இந்த படத்தில்தான் பார்த்தேன். இதில் கிக் பாக்ஸிங் பற்றி ஏதோ சொல்கிறேன் பேர்வழி என்று அந்த விளையாட்டை எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக் கேவலப்படுத்தி நாறடித்து விட்டனர். கிக் பாக்ஸிங் அமைப்புகள் இந்த படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தால் ஆச்சர்யம் இல்லை.<br />
<br />
இந்த படத்தின் லட்சனத்திற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். சிவகார்த்திகேயன் கலந்துகொள்ளும் பாக்ஸிங் இறுதிப் போட்டியின் முடிவு பற்றியே தினதந்தியில் மூன்று பத்தி செய்திதான் வருகிறது. ஆனால் போட்டியின் லீக், அரை இறுதி மேட்ச்சுகள் பற்றி போட்டோவுடன், தலைப்புச் செய்தியே வருகிறதாம். இந்தியா டுடே, தி வீக் புத்தகங்களும் இதில் அடக்கம். நம்மையெல்லாம் அடிமுட்டாள்களை விட கேவலமாக நினைத்து விட்டார் இயக்குனர்.<br />
<br />
படத்தில் வரும் காட்சி ஒன்று: இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் தான் ஹன்சிகா எனக்குக் கிடைப்பார் என்று சொல்லி கிருஷ்ண வம்சியிடம் சென்று போட்டியில் இருந்து விலகிக் கொள்ள சிவகார்த்திகேயன் கேட்பார். அப்போது கோபமாக வம்சி, "உங்களுக்கெல்லாம் பாக்ஸிங்னா விளையாட்டாப் போச்சுல்ல" என்பார். இந்த கேள்வியை இயக்குனர் தனக்குக்தானே கேட்டுக்கொள்ளவும். ஏனென்றால், பாக்ஸிஙை அவ்வளவு அசிங்கப் படுத்திவிட்டார்.<br />
<br />
இறுதியாக, இந்த படமெல்லாம் ஓடவே கூடாது. ஓடினால், நிறைய பேர் இந்த மாதிரி குப்பைகளை (படம்) எடுத்து நம் தலையில் கொட்டுவார்கள். அப்புறம் நம் சினிமாவின் தரம் மேலும் பல படிகள் சறுக்கி விடும். ஓடிவிட்டால்?? சுஜாதா சொல்வது போல் நம்மை பசித்த புலி தின்னட்டும்.<br />
<br />
<br /></div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-404341403562346037.post-19146583799721234042014-03-03T10:20:00.000-08:002014-03-03T10:24:43.076-08:00The Good, The OK, The Ugly<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சென்ற வாரம் நான் பார்த்த மூன்று படங்களின் ரத்தினச் சுருக்கமே இந்த metaphor.<br />
<br />
1. The Good---> 24 நார்த் காதம் (24 North Miles): பகத் பாசில், நெடுமுடி வேணு, சுவாதி- இவர்களின் அருமையான நடிப்பில் ஒரு பீல்-குட் படம். பாசில் அதீத சுத்தம் பேணும் ஒரு perfectionist. சுவாதி NGO-ல் வேலை செய்யும் ஒரு சமூக சேவகி. நெடுமுடி வேணு வாழ்க்கையின் இறுதியில் இருக்கும் ரிட்டயர்ட் கம்யூனிஸ்ட். இவர்கள் மூவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்குமாறு ஒரு கட்டாயம் ஏற்படுகிறது. அந்த பயணம் தான் படத்தின் திரைக்கதை. படத்தின் ஆதார பலம் அதன் தெளிவான திரைக்கதை மற்றும் காஸ்டிங். அந்நியன் அம்பி மாதிரியான ஒரு ரிசர்வ்ட் perfectionist பாசில், முடிந்த வரை பிறருக்கு உதவும் சுவாதி, மிகவும் பொறுமையோடு வாழ்கையை அணுகும் வேணு என முரணான கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு கோர்வையான திரைக்கதையில் அச்சத்தி விட்டார் இயக்குனர். இது இவரின் முதல் படம் என்பது மேலும் ஆச்சர்யம். தன் மனைவி இறந்தது தெரிந்து சாலையில் இருந்து வீட்டிற்கு நடந்து வரும்போதும், மனைவி உடலைப் பார்த்துவிட்டு தன் வாழ்க்கையில் இனி என்ன இருக்கிறது என்று கண்களாலேயே பேசுவது என வேணு நடிப்பில் பாசிலை விட ஒருபடி மேலே. மேலே சொன்ன காட்சியில் படத்தில் யாருமே அழ மாட்டார்கள். ஆனால் நான் அழுதுவிட்டேன். அதற்க்கு காரணம் வேணுவின் நடிப்பு + உள் மனதை வருடும் பின்னணி இசை. நிச்சயம் பாருங்கள். Rating: 4/5<br />
<br />
2. The OK---> தெகிடி (Thegidi): மேம்போக்காக இந்த படம் பிடித்த மாதிரி இருந்தாலும், சற்று ஆழ்ந்து யோசித்தால் ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை மட்டுமே இதில் இருப்பதை உணர முடியும். ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகன், தான் உளவு பார்த்த நபர்கள் ஒவ்வொருவராய் கொல்லப்பட, அதன் மர்மத்தை ஆராய்கிறார். சதியை அடுத்த மூன்று காட்சிகளில் அறிந்து, நான்காவது காட்சியில் மெயின் குற்றவாளியைப் பிடித்து விடுகிறார். தட்ஸ் ஆல். கொலைகளின் காரணம் மட்டுமே புதுசு. மற்றபடி அதன் மரம்த்தை அவிழ்ப்பதை, திரைக்கதையில் இன்னும் சுவாரசியமாக, விரிவாக காட்டியிருக்கலாம். அதை விட்டுவிட்டு ஜனனி அய்யருடன் இரண்டு பாடல், இவர்களின் ரொமான்ஸ் என முதல் பாதி வேஸ்ட் செய்யப்பட்டு விட்டது. இடைவேளைக்கு சற்று முன்னர்தான் படம் ஆரம்பித்த மாதிரி எனக்கு தோன்றியது. எனினும் அபத்த மசாலா, காமெடி இம்சை இல்லாத ஒரு நீட் சஸ்பென்ஸ் த்ரில்லெர் என்ற முறையில் நம்பிப் பார்க்கலாம். Rating :3/5<br />
<br />
3. The Ugly---> புலிவால் (Pulivaal): இந்த குப்பைக்கு 'மொண்ணை'வால் என்ற டைட்டில் மிகப் பொருத்தம் என்று நினைக்கிறேன். ஒரு எலிமெண்டரி ஸ்கூல் ரேஞ்சில் திரைக்கதை இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால், ப்ளே ஸ்கூல் ரேஞ்சில் கூட இல்லை. ஒரு பணக்காரனின் செல்போன், அதுவும் அவனின் அந்தரங்க வீடியோ இருக்கும் செல்போன் கிடைத்தால் எவ்வளவு த்ரில்லிங்காய் திரைக்கதை அமைக்கலாம்? ஆனால் அதை வைத்துக்கொண்டு தனக்குப் பிடிக்காதவர்கள் மேல் சாணியைக் கரைத்து ஊற்ற சொல்கிறார் , கன்னத்தில் அறையச் சொல்கிறார் விமல். எனக்கென்னமோ 40 ரூபாய் கொடுத்து இந்த சாணியை என் தலையில் நானே ஊற்றி விட்டதாகத் தெரிந்தது. எப்போதும் பெருச்சாளியை விழுங்கின மாதிரி முழிக்கும் விமல், SMS கடி ஜோக்காக சொல்லி நம்மை நரகத்தின் வாசலுக்கு இழுத்து செல்லும் சூரி, நானும் காமெடி செய்கிறேன் பேர்வழி என்று அறுக்கும் தம்பி ராமய்யா என்று ஒவ்வொருவரும் அவரவர் பங்குக்கு நம்மை கொந்தி எடுக்கிறார்கள். டிவியில் போட்டால் கூட பார்க்கக் கூடாத/முடியாத அமர காவியம் இந்த 'மொண்ணை' சாரி புலிவால். Rating- 1/5</div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-404341403562346037.post-47649903593382917522014-02-25T10:15:00.000-08:002014-02-25T10:15:32.431-08:00நான் இறால் வாங்கினேன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஞாயிறு அன்று, இறால் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சே, சரி இன்னைக்கு சமைச்சு சாப்பிடனும்னு நினச்சேன். வீட்டுக்கு பக்கத்திலயே இருக்கும் மீன் கடையல் சென்று, 'அக்கா, இறால் என்ன விலை?' என்று கேட்டேன். அவர், 'இன்னைக்கு ரொம்ப கம்மி தம்பி! கிலோ 400(!?) தான்' என்றார். 'என்னங்க இது? வழக்கமா 300 தான?' என்று ஏதோ தினம் தினம் இறால் வாங்குபவன் போல் நான் அடித்து விட, அதற்க்கு 'தம்பி, 300 ரூவாக்கு நீ தான் போய் கடல்ல பிடிச்சிட்டு வரணும்' என்று பல்பு கொடுத்தார். நமக்கு பல்பு வாங்குவது புதுசு இல்லையென்றாலும், அருகில் இருந்த 2 பெண்கள் சிரிக்கவும், மனசாட்சி கூண்டில் இருந்த மிருகம் முழித்துக்கொண்டு, 'டேய் அருண்! 400 ரூபாய்க்கு கம்மியா இறால் வாங்கியே ஆகணும்டா!' என்று ஆணையிட்டது. உடனே வேளச்சேரி மீன் மார்க்கெட்டுக்கு ஷேர் ஆட்டோவில் புயலென புறப்பட்டேன். அங்கே கூட்டம் கம்மியா இருந்த கடையில் சென்று, இறால் விலை கேட்டேன். 'சார், 300 ருபீஸ் தான் சார்' என்று சொல்ல, என் மைண்ட் வாய்ஸ் 'சபாஷ்டா அருண். பின்னிட்ட' என்று கூச்சலிட, 'எனக்கு அரை கிலோ' என்று இறாலை அள்ளினேன். 'சார், அது 400 ருபீஸ் சார், 300 ருபீஸ் இறால் இங்க இருக்கு சார்' என சற்று குண்டான மண் புழுவைக் காட்டினான். 'எனக்கு இது தான் வேணும்' என பெரிய சைஸ் இறாலைக் காட், 'அப்ப அரைக் கிலோக்கு 200 கொடுங்க' என்றான் கடைக்காரன். 'என்னப்பா நீ' என சொல்ல வந்து, எங்கே இவன் வலையைக் கொடுத்து கடலில் இறக்கி விட்டுவிடுவானோ என பயந்து, என் மூளை என் மைக்கை off பண்ணியது. நேரம் 12:20 என்றது என் டைமக்ஸ் வாட்ச். சரி ஆகிறது ஆகட்டும் என Rs.200க்கு அரை கிலோ வாங்கினேன். அதோடு என் தேடல் முடியவில்லை. இறால் தோலை உரிக்க 20, ரொம்ப நேரம் ஆனதால் நான் அருந்திய கரும்பு ஜூஸ் 20, இளநீர் 40, திரும்ப வரும்போது ஷேர் ஆட்டோவும் பஸ்ஸும் இல்லாமல் ஆட்டோ சார்ஜ் 50 என என் கணக்கிலே வராமல் 130 ரூபாய் பணால். ஆட்டோவில் போகும்பது, மொத்த செலவு 330 என்றது என் கணிதம். வீட்டிற்கு போகையில் பக்கத்து கடைக்கார அக்கா, 'என்ன தம்பி? இறால் வாங்கினீங்களா?' என்று கேட்க பதில் பேச என்னிடம் வார்த்தையில்லை என்று இத்தோடு எஸ்கேப் ஆகிக் கொள்கிறேன்.</div>
ARUNhttp://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.com2