Wednesday, January 13, 2016

ஸ்டிக்கர்களின் காலம்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இத்தனை TMC நீரைத் திறந்து விடவேண்டும் என்று பத்து முறைக்கும் மேலாக உச்ச நீதி மன்றம் கூவினாலும், அதை கர்நாடகம் காதில் வாங்காது.

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீரைத் தேக்கலாம் என்று உச்ச நீதி மன்றம் 1001வது முறையாக சொன்னாலும், அங்கே செல்லும் தமிழக அதிகாரிகளை கேரளம் தடுத்து நிறுத்தும்.

உண்மையான சாட்சி நொந்து, வெந்து இறந்து போக, பிறழ் சாட்சியின் அடிப்படையில், சல்மான்கான் தான் காரை ஓட்டினார் என்பதற்கு ஆதாரம் போதவில்லை என்று அவர் விடுதலை ஆகலாம்.

ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியை செலுத்தி, அவளை சிதைத்த மிருகம், 18- வயது ஆகவில்லை என்பதனால் விடுதலை ஆகி, கைசெலவுக்கு அரசாங்கத்திடம் இருந்து பணம் பெறலாம்.

நூற்றுக்கணக்கான அப்பாவி தொழிலாளர்களை பலிவாங்கிய முகலிவாக்கம் 11-மாடி கட்டிடத்தின் முதலாளி, மறுநாளே ஜாமீனில் வெளிவந்து, இன்று வரை, சொகுசு வாழ்க்கை வாழலாம்.

மேற்கண்ட அற்புதங்கள் எல்லாம் நிகழும் நம் இந்திய தேசத்தில், தன் சொந்த நாட்டைச் சேர்ந்த ஓர் இனத்தின் மக்களின் மரபை, அடையாளத்தை, எங்கிருந்தோ வந்த அந்நிய அமைப்பால் தடை செய்ய முடிகிறது என்றால், ஆச்சர்யம் இல்லை தானே? ஏனென்றால் இது ஸ்டிக்கர்களின் காலம்.

No comments:

Post a Comment