Tuesday, January 12, 2016

ஜல்லிக்கட்டு மீதான தடை - ஒரு தொடக்கம்

ஜல்லிக்கட்டு மீதான தடை - ஒரு தொடக்கம்

ஜல்லிக்கட்டு பிரச்சினையில், இப்போதே முடிவு எடுக்காவிடில், கீழ்க்கண்ட தடைகளும் பின்னாளில் வரலாம்.

1. அரிசி நிறைய சேர்ப்பதே சர்க்கரை நோய்க்குக் காரணம் என்று கூறி, இட்லி, தோசை, சாதம் இவற்றிற்குத் தடை- சப்பாத்தி சாப்பிட மட்டுமே அனுமதி

2. வடை, போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களில் கொழுப்பு அதிகம் இருப்பதால் தடை- சமோசா, பானி பூரி, பேல் பூரி, பிட்சா, பர்கர்க்கு மட்டுமே அனுமதி

3. வேஷ்டியில் பக்கெட் இல்லை- அதனால் வேஷ்டிக்குத் தடை- பேன்ட் போட மட்டுமே அனுமதி. வேண்டுமென்றால் ஷெர்வானி அணிந்து கொள்ளலாம்.

4. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற கிராமிய கலைகளில் ஆபாசம் நிறைய இருப்பதால் அவைகளுக்குத் தடை- இனிமேல் தாண்டியா மட்டும் ஆட அனுமதி

5. கோயில் திருவிழாக்களில் மஞ்சள் நீரூற்றும் நிகழ்ச்சிக்குத் தடை - ஹோலி கொண்டாட மட்டுமே அனுமதி

6. நாட்டுக்கோழி, காடை, வெள்ளாடு- இவைகளின் இறைச்சி உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதால் தடை. அரசு அங்கீகாரம் பெற்ற KFC, McDonald சிக்கனுக்கு மட்டும் அனுமதி

7. ரஸ்தாளி, இலக்கி, கற்பூரவல்லி போன்ற நாட்டு வாழைப் பழங்களுக்குத் தடை- மோரிஸ் போன்ற மரபணு மாற்றப்பட்ட பழங்களுக்கு மட்டுமே அனுமதி.

2000 - 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியையே தடை செய்ய முடிந்த நம் நாட்டில், மேற்சொன்ன சின்ன விஷயங்களா கடினம்? என்றாவது ஒருநாள், சொந்த மரபு நெறிமுறைகளைத் தொலைத்துவிட்டு, குடிநீர் முதல், மலம் கழுவும் நீர் வரைக்கும் பன்னாட்டு நிருவனங்களிடம் கைகட்டி நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.



No comments:

Post a Comment