Tuesday, April 22, 2014

சலூன் கடை- அன்றும், இன்றும்  
===============================

அன்று- 2007, IRTT, ஈரோடு

அப்போது எங்களுக்கு 3வது செமஸ்டர். முடி வெட்டப் போனால் மொத்தமாக நான்கு, ஐந்து பேராய்தான் போவோம். பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை காலை சாப்பிட்டு இல்லை சாப்பிடாமல் போவோம். அன்று நான், நண்பர்கள் அய்யர் (அருண்), ரவிந்தர், வெங்கி, விஜயவேல் என ஐந்து பேர் முடி வெட்டக் கிளம்பினோம். நான் 3வதாக முடி வெட்ட உட்கார்ந்தேன்.
மூன்று
நான் "இன்னும் கொஞ்சம் சைடுல கட் பண்ணுங்க".

"தம்பி,இதுக்கு மேல ஷார்ட்டா வெட்டுனா ஒரு மாதிரி இருக்கும்பா"

"எந்த மாதிரியாவும் இருக்காது. அதுக்குத் தக்க சென்டர்ல கட் பண்ணிடுங்க"

"இப்போ ஓகே வா தம்பி?"

"இன்னும் கொஞ்சம் சைடுல"

"டேய் படுத்தாதடா. இப்பவே மணி 12. லஞ்ச்க்குள்ள நம்ம ஹாஸ்டல்க்கு போகணும்" என்றான் வெங்கி.

"சரிடா, கத்தாத"..

நான் சுமாராக ஐந்து முறை இன்னும் கொஞ்சம் சைடுல வெட்டுங்க என்று சொல்லி இருப்பேன்.

இன்று- 2014, மடிப்பாக்கம், சென்னை

இன்றிரவு முடி வெட்டலாம் என்று வீட்டிற்கு பக்கத்தில் இருந்த AC சலூன்க்கு சென்றேன். பின் தலையில் ரொம்ப நேரமும், சைடில் கொஞ்ச நேரம், நடுவில் சுத்தமாக வெட்டாமல், 'டன் சார்' என்றான்.

"என்னய்யா விளையாட்ரியா? சென்டர்ல வெட்டவே இல்ல? நல்லா வெட்டுய்யா"

"சார் சென்டர்ல" என இழுத்தான்.

"சென்டர்ல என்னய்யா?"

"சென்டர்ல வெட்டினா"

"சென்டர்ல வெட்டின என்ன? உன் சிஸர் உடஞ்சிடுமா?"

"இல்ல சார். சென்டர்ல இன்னும் வெட்டினா வழுக்கை நல்லா தெரியும்"

எனக்கு சுரீரென்று உரைத்தது. அவனை சொல்லிக் குற்றம் இல்லை. லேசான காற்றுக்கே என் நடு மண்டை முடி தனியாய் தூக்கிக்கொண்டு, பப்பரப்பே என்று வழுக்கை பல்லை இளிக்கும். அந்தக் கோலத்தில் ஒரு சில ஆபீஸ் நண்பர்களே என்னைப் பார்த்து, "இவருக்கு நடு மண்டையில் முடி இருந்தால் ஹார்ட்வேர் அருண் மாதிரி இருப்பார்ல?" என்று வெகுளியாக சொல்வார்கள்.

"சரி. அப்படியே வெட்டுங்க". ஒரு வழியாக 'கட்'டிங்கை முடித்து விட்டு வீடு செல்கையில், காலேஜில் முடி வெட்டியவரை நினைத்து சிரித்துக்கொண்டேன்.

No comments:

Post a Comment