Tuesday, June 2, 2015

எங்கே நடக்கிறது தவறு??

இரண்டு வாரம் அலுவலக வேலை காரணமாக தைவான் நாட்டில், ஷின்ச்சு (Hsinchu) என்ற நகரில் தங்க வேண்டி வந்தது. வார இறுதியில் நண்பர்களுடன் ஊர் சுற்றிப் பார்க்கையில், ஒரு விஷயம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. நம்மூர் பெட்டிக்கடைகள் போல சிறு சிறு கடைகளில் கூட மது விற்பனை நடைபெறுகிறது. பலதரப்பட்ட வகைகளுடன். பெண்கள் கூட மது வாங்குவது சாதரணமாக .இருந்தது. ஆனால், நாங்கள் இருந்த பதினைந்து நாட்களில்,  பொது இடங்களில் ஒருவரைக் கூட மது போதையில் பார்க்கவில்லை. யாரும் சாலையில் சுய நினைவின்றி விழுந்து கிடைக்கவில்லை. ஆனால், மது அருந்துவதை ஒருவிதத் தவறாக நினைக்கும் நம் தமிழ்த் திருநாட்டில்தான் நிலைமை தலைகீழ். இரவு நேரங்களில், அதிமிகு போதையுடன் தள்ளாடும் 'குடிமகன்களை'  எங்கிலும் மிக சாதாரணமாகக் காண முடியும்.  தைவானிலும் மதுதான் விற்கிறார்கள்; நம்மூரிலும் இதே  மதுதானே விற்கிறார்கள்? எங்கே நடக்கிறது தவறு????

No comments:

Post a Comment